15. வெளிநாட்டில் ஊழியம்
இவ்வுலகம் தொழில் பிரிவினை என்னும் தத்து வத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கி றது. ஒருவனிடமே எல்லாப் பொருள்களும் இருக்கும் என்று எண்ணுதல் வீணாகும். எனினும் நாம் எவ் வளவு குழந்தைப் புத்தியுள்ளவர்களாயிருக்கிறோம்? குழந்தை தன் அறியாமையால் இப்புவியில் விரும்பத் தக்க பொருள் தன்னிடமுள்ள பொம்மை ஒன்றே எனக் கருதுகிறது. அவ்வாறே இவ்வுலக அதிகாரம் மிகப்படைத்த ஒரு தேயத்தார், அவ்வதிகாரம் ஒன்றே விரும்பத்தக்க பொருளென்றும், முன்னேற்றம், நாகரிகம் என்பவையெல்லாம் அது தானென் றும் கருதுகிறார்கள். அவ்வதிகாரம் பெறாத, அதில் பற்று மில்லாத வேறு சாதியார் இருப்பின் அவர்கள் உயிர் வாழ்வதற்கே தகுதியற்றவர்களென்றும், அவர்களுடைய வாணாள் வீண் என்றும் எண்ணு கிறார்கள்! இதற்கு மாறாக, வேறொரு சாதியார் வெறும் உலகாயத நாகரிகம் அணுவளவும் பயனற்ற தென்று எண்ணுதல் கூடும். ஒருவன் இவ்வையகத்தி லுள்ள எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாயினும், பாரமார்த்திகச் செல்வம் மட்டும் பெறாதவனாயின் அவன் பாக்கியம் பெறாதவனே என்னும் வாக்கியம் கீழ் நாட்டில் எழுந்தது. இது கீழ் நாட்டு இயற்கை; முன்னது மேல் நாட்டு இயற்கை. இவ்விரண்டுக்கும் தனித்தனியே மேன்மையும், மகிமையும் உண்டு. இவ்விரண்டு இலட்சியங்களையும் கலந்து சமரசப் படுத்தலே தற்போது செய்ய வேண்டிய காரியமா கும். மேனாட்டுக்குப் புலனுலகம் எத்துணையளவு உண்மையோ அத்துணையளவு கீழ்நாட்டுக்கு ஆத்ம உலகம் உண்மையாகும். கீழ் நாட்டானைப் பகற் கனவு காண்பவனென்று மேனாட்டான் எண்ணுகி றான். அவ்வாறே மேனாட்டானைக் கனவு காண்பவ னென்றும், இன்றிலிருந்து நாளை அழியக்கூடிய விளை யாட்டுக் கருவிகளை சாசுவதமெனக் கருதி விளையாடு பவனென்றும் கீழ்நாட்டான் நினைக்கிறான். இன்றோ நாளையோ விட்டுப் போகவேண்டிய ஒரு பிடி மண்ணுக்காக வயதுவந்த ஸ்திரீ புருஷர்கள் இவ்வளவு பாடுபடுகிறார்களே என்றெண்ணி அவன் நகையாடுகிறான். இவ்விருவரும் ஒருவரையொருவர் கனவு காண்பவரென்று கருதுகிறார்கள். ஆனால் மக்கட்குலத்தின் முன்னேற்றத்துக்கு மேனாட்டு இலட்சியத்தைப் போல் கீழ் நாட்டு இலட்சியமும் அவசியமேயாகும். கீழ் நாட்டு இலட்சியமே அதிக அவசியமானதென்றும் நான் கருதுகிறேன்.
மேனாட்டார் பாரமார்த்திக உயர் ஞானத்தை அறிந்து கொள்வதற்கு நீண்டகாலம் ஆக வேண் டும். பவுன் ஷில்லிங் பென்ஸே அவர்களுக்கு எல் லா மாகும். ஒரு மதமானது அவர்களுக்குப் பணம், சுகம், அழகு அல்லது தீர்க்காயுளை அளிக்குமானால் எல்லோரும் அதனிடம் ஓடுவார்கள்; இல்லாவிடில் அதன் அருகில் நெருங்க மாட்டார்கள்.
எவ்வித வளர்ச்சிக்கும் முதன்மையாக வேண் டுவது சுதந்திரம். உங்கள் முன்னோர்கள் ஆன்மாவுக் குப் பூரண சுதந்திரமளித்தார்கள். அதன் பயனாக மதம் வளர்ச்சி பெற்றது. ஆனால் அவர்கள் உடலை எல்லாவகைப் பந்தங்களுக்கும் உட்படுத்தினார்கள். ஆதலின் சமூகம் வளரவில்லை. மேனாட்டில் இதற்கு நேர் மாறாக சமூகத் துறையில் எல்லாச் சுதந்திரமு மளித்து, சமயத்துறையில் சுதந்திரமேயில்லாமல் செய்யப்பட்டது.
மேனாட்டு சமூக முன்னேற்றத்தின் மூலமாகவே பாரமார்த்திக ஞானம் பெற விரும்புகிறது. வேறு வழியில் வரும் பாரமார்த்திகம் அதற்குத் தேவை யில்லை. கீழ் நாடோ பாரமார்த்திக அபிவிருத்தியின் மூலமாகவே சமூக அதிகாரம் பெற விழைகிறது. வேறு வகையான சமூக முன்னேற்றம் அதற்கு வேண்டாம். பார்
இயந்திரங்கள் மானிடர்க்கு என்றும் மகிழ்ச்சி அளித்ததில்லை, என்றும் மகிழ்ச்சியளிக்கப் போவது மில்லை. அவை மகிழ்ச்சியளிக்கும் என்று நமக்குச் சொல்வோன் இயந்திரத்தில் இன்பமிருப்பதாகச் சொல்பவனாகிறான். உண்மையில் இன்பம் எப்போ தும் நமது உள்ளத்தில் இருக்கிறது. எனவே மன தை அடக்கிய மனிதன் ஒருவனே உண்மை மகிழ்ச்சியடைதல் கூடும். மற்றவர்கள் அடைய முடியாது. இயந்திர சக்தி என்பது தான் என்ன? கம்பியின் மூலம் மின்சார சக்தியை அனுப்பக் கூடிய ஒருவனைப் பெரியவனென்றும், மேதாவி என்றும் ஏன் கருத வேண்டும்? அதைவிடக் கோடானுகோடி மடங்கு பெரிய காரியங்களை இயற்கை ஒவ்வொரு கணமும் செய்யவில்லையா? அந்த இயற்கையை ஏன் வணங் கிப் போற்றுதல் கூடாது? இவ்வுலகம் முழுவதிலும் உன் ஆணை செல்லலாம்; இந்த புவனத்திலுள்ள ஒவ்வோர் அணுவையும் நீ வயப்படுத்திவிடலாம்; ஆயினும் பயன் என்ன? உன்னை நீ வெற்றிகொண் டிருந்தாலன்றி, உனக்குள் நீ இன்பமுறும் சக்தி பெற்றிருந்தாலன்றி, உண்மை மகிழ்ச்சியடைய முடியாது.
நமது துன்பங்களையெல்லாம் என்றைக்கும் அழித்துவிடவல்லது ஆத்ம ஞானம் ஒன்றேயாம். மற்ற ஞானங்கள் எல்லாம் சிறிது காலத்திற்கு நமது தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்; ஆனால் ஆத்ம ஞானம் உண்டாகும் போது தான் பூரண உள்ள நிறைவு ஏற்பட்டுத் தேவை உணர்வை அடியோடு நசித்து விடுகிறது.
உடல் வலிமையினால் மிகப் பெருங் காரியங் கள் செய்யப்படுகின்றன. மூளைத் திறமையினால், பௌதிக சாஸ்திரங்களின் துணைபெற்ற இயந்திர சாதனைகளைக் கொண்டு இன்னும் அதி ஆச்சரிய மான வினைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் இவை யெல்லாம், ஆத்ம சக்தியின் மூலம் இவ்வுலகில் செய்யக்கூடிய மகத்தான காரியங்களுக்கு முன்னால் அற்பமானவையாகும்.
மேனாட்டு நாகரிகத்தின் பகட்டையும் பளபளப் பையும் நான் அறிவேன். அதனின்றும் வெளித் தோன்றும் ஆச்சரியமான புற சக்திகளையும் அறி வேன். ஆயினும் இந்த மேடை… மீது நின்று இவை யெல்லாம் வீண்; வெறும் பிரமை; உருவெளித் தோற்றம்; ஆண்டவன் ஒருவனே மெய்ப்பொருள்” என்று நான் கூறுகிறேன்.
மேனாட்டாராகிய நீங்கள் உங்களுக்குரிய துறை களில், அதாவது இராணுவம், அரசியல் முதலிய வற்றில் காரியவாதிகளாயிருக்கிறீர்கள். இத்துறை களில் கீழ் நாட்டான் செயல் திறன் அற்றவனாயிருக்க லாம். ஆனால் அவன் தனக்குரிய சமயத்துறையில் சிறந்த காரிய வாதியாய் விளங்குகிறான்.
”ஹுர்ரா” என்ற கோஷத்துடன் பீரங்கி யின் வாயில் குதிக்க உங்களுக்குத் தைரியமுண்டு. தேச பக்தியென்னும் பெயரால் நீங்கள் தீரச் செயல்கள் புரிவீர்கள். தேசத்திற்காக உயிர் கொடுக் கவும் சித்தமாயிருப்பீர்கள். இது போன்றே, கீழ் நாட்டார் கடவுளின் நாமத்தைச் சொல்லிக்கொண்டு தீரச் செயல்கள் புரிவார்கள்.
இக வாழ்க்கையில் சுகாநுபவம் மேனாட்டு இலட்சியமாயிருப்பது போல் உயரிய ஆத்மசாதனம் எங்கள் இலட்சியமாயிருக்கின்றது. ”சமயம் என்பது வெறும் வாய்ப் பேச்சன்று; இவ்வுலக வாழ்க்கை யில் முற்றும் அனுஷ்டித்தற்குரியது” என்று நிரூ பித்தல் கீழ் நாட்டின் இலட்சியம்.
ஒரு மனிதன் எவ்வளவு பொருள் படைத்தல் கூடும் என்னும் பிரச்னைக்கு முடிவு காண மேனாட்டில் முயன்று வருகிறார்கள். இங்கு நாம் எவ்வளவு சொற்பத்தில் ஒருவன் வாழ்க்கை நடத்தக் கூடும் என்று கண்டு பிடிக்க முயன்று வருகிறோம்.
ஒரு நாட்டார் நிலைபெற்று வாழவும், மற்ற வர்கள் அழிந்து படவும் காரணமாயிருப்பதெது? வாழ்க்கைப் போராட்டத்தில் எது மிஞ்சி நிற்கும்? அன்பா, பகைமையா? துறவொழுக்கமா, சுகா நு பவமா? சடமா, ஆன் மா வா? எது நிலைக்கும்…. துறவு, தியாகம், அஞ்சாமை, அன்பு இவையே நிலைக்குமென்பது நமது முடிவு.
ஆசியாவின் போதனை சமய போதனையாகும். ஐரோப்பாவின் படிப்பினை அரசியல் படிப்பினை யா கும்.
அரசியலிலும், பௌதிக சாஸ்திர ஆராய்ச்சி யிலும் மேனாடு தீரர்களுக்குப் பிறப்பளித்திருக்கிறது. கீழ்நாடு பாரமார்த்திகத் துறையில் பெரியோர்களைத் தந்திருக்கிறது.
கீழ் நாட்டான் இயந்திரம் செய்யக் கற்றுக் கொள்ள விரும்பினால் அவன் மேனாட்டானின் கால டியில் அமர்ந்து கற்றுக்கொள்ளல் தகுதியுடைத்தா கும். அவ்வாறே மேனாட்டான் ஆத்மாவைப்பற்றி யும், கடவுளைப்பற்றியும், சிருஷ்டி இரகசியங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினால் அவன் கீழ் நாட்டான் அடியின் கீழ் உட்கார்ந்து தெரிந்து கொள்ளல் வேண்டும்.
நமது சமயத்தின் மகத்தான உண்மைகளை உலகுக்கெல்லாம் எடுத்துரையுங்கள். உலகம் அவற் றிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
சமயப் பிரசாரம் செய்ய நீங்கள் வெளியே செல்ல வேண்டும். உலகிலுள்ள ஒவ்வொரு தேசத் தார்க்கும் ஒவ்வொரு ஜாதியாருக்கும் உங்கள் சமய உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும். இதுவே முத லில் செய்ய வேண்டிய வேலை.
நூற்றுக்கணக்கான வருஷங்களாய் மனிதனு டைய சிறுமையைப் பற்றிய கொள்கைகளையே ஜனங்கள் கேட்டிருக்கிறார்கள். ‘நீங்கள் வெறும் பூஜ்யங்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அவர்கள் ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்ளட்டும். தாழ்ந்தவனிலும் தாழ்ந்த மனிதனிடத்தும் கூட ஆத்மா உண்டென் றும் அதற்குப் பிறப்பிறப்பில்லையென்றும் அவர் களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
இந்தியாவின் ஆத்ம வித்தையினால் உலகை வெற்றி கொள்ள வேண்டும். நமது தேசீய வாழ்வு அவ்வெற்றியையே பொறுத்திருக்கிறது. அப்போது தான் நமது தேசீய வாழ்வு புத்துயிரும் புதிய பல மும் பெற்றுச் சிறந்து விளங்கும்.
நாம் வெளிப்புறப்பட வேண்டும். நமது பார மார்த்திக ஞானத்தினாலும், ஆத்ம வித்தையினாலும் உலகை ஜெயிக்க வேண்டும்; அல்லது இறந்துபட வேண்டும். வேறு வழி இல்லை.
சமயம், பாரமார்த்திகம் இவற்றின் வெற்றியே பாரத நாட்டின் வெற்றியென்பதாக இந்தியாவின் மகிமை வாய்ந்த சக்கரவர்த்தியான அசோகவர்த் தனர் கூறுயிருக்கிறார். உலகம் மற்றொரு முறையும் இந்தியாவினால் ஜெயிக்கப்படவேண்டும். இதுவே என் வாழ்க்கையின் கனவாகும். உங்களில் ஒவ்வொரு வரும் இக்கனவைக் கண்டு வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அக்கனவு மெய்யாகும் வரையில் நீங்கள் சோர்வடைந்து நிற்கக்கூடாது. பாரத நாடு இப்பூவுலக முழுவதையும் ஜெயித்தல் என்பதே நம் முன்னுள்ள மகத்தான இலட்சியமாகும். அதற்குக் குறைவான இலட்சியம் நமக்கு வேண்டாம். அந்த இலட்சியத்திற்கு நாம் ஒவ்வொருவரும் சித்தமாக வேண்டும். அதற்காக அரும்பாடு பட வேண்டும். அன்னிய நாட்டார் வந்து இந்நாடு முழுவதையும் தங்களுடைய சைன்ய மயமாக்கட்டும். அதைப் பொருட்படுத்த வேண்டாம். பாரதர்களே! எழுந் திருங்கள். உங்கள் பாரமார்த்திக ஆயுதத்தினால் உலகை வெற்றி கொள்ளுங்கள்.
உலகாயத நாகரிகத்தையும் அதனுடைய துன் பங்களையும் உலகாயதத்தினாலேயே ஒரு நாளும் ஜெயிக்க முடியாது. சைன்யங்கள் சைன்யங்களை ஜெயிக்க முயலும் போது அவை பல்கிப் பெருகி மக்களை மாக்களாக்குகின்றனவேயல்லாது வேறில்லை. மேனாட்டைப் பார மார்த்திகத்தினாலேயே வெற்றி கொள்ள வேண்டும். –
நீங்கள் பிறருக்கு அளிக்கக்கூடிய விலை மதிக்க வொண்ணாத பெருஞ்செல்வம் உங்களிடம் இருக் கிறது. அது தான் உங்கள் சமயம்; உங்கள் ஆத்ம வித்தை. மேனாட்டாருக்கு அச்செல்வத்தை அள்ளி வழங்குங்கள்.
