8. ஆட்சியைப் பிடிப்பதற்காக இரண்டு வகுப்புகள் முயற்சி செய்யும்போது என்ன நிகழ்கிறது?
புராதன இந்தியா பல நூற்றாண்டுகளாக பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் இடையே, ஒரு போர்க்களமாக விளங்கி வந்தது. முன்னணியில் இருந்த இந்த இரண்டு வகுப்பினரும் தங்கள் ஆசைப் பட்ட திட்டங்களுக்காக இந்தியாவைப் போர்க்கள மாக்கினர். ஒரு பக்கம், மக்கள் மீது அரசர்கள் சட்ட விரோதமான கொடுங்கோன்மை ஆட்சி நடத்துவதற்கு புரோகிதர்கள் முட்டுக்கட்டையாக நின்றார்கள், க்ஷத்திரியர்களோ பொதுமக்கள்தான் தங்கள் சட்டபூர் வமான இரையென்று கருதினார்கள். மற்றொருபக்கம், மக்களை அடக்கி ஆள்வதற்காக புரோகிதர்கள் நாளுக்குநாள் சடங்குமுறைகளை அதிகரித்துக் கொண்டே வந்தனர். அவர்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடிய ஒரே சக்தி, க்ஷத்திரியர்களின் சக்திதான்.
இந்தப் போராட்டம் நமது வரலாற்றின் ஆரம்ப காலத்திலேயே தொடங்கிவிட்டது. வேதங்கள் முழு வதிலும் இதைத் தெளிவாகக் காணலாம். க்ஷத்திரியர் களின் தலைவராகவும், ஞானத்தைப் பரப்பியவர்களின் தலைவராகவும் ஸ்ரீகிருஷ்ணர் வந்து ஒரு சமரசப் பாதை யைக் காட்டியபோதுதான் தற்காலிகமாக ஓய்வு ஏற் பட்டது. இதன் விளைவுதான் கீதை- தத்துவம், தாராள மனப்பான்மை, தர்மம் ஆகியவற்றின் சாரமான போத னைகள். ஆயினும் பழைய சண்டையின் காரணங்கள் இருந்துகொண்டேயிருந்தன. காரணங்கள் இருக்கும் போது விளைவு ஏற்படாமல் இருக்க முடியுமா?
ஏழைகள் மற்றும் பாமரர்கள்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று இந்த இரண்டு வகுப்பினருக்கும் அளவுக்கு மீறிய ஆசை இருந்தது. ஆகையால் மீண்டும் போராட்டம் கடுமையாயிற்று. அந்தக் காலத்தைப்பற்றி நமக்குக்கிடைக்கின்ற இலக்கியங்கள் சொற்பமே. அந்தக் காலத்திலிருந்த பெரும் போராட்டத்தில் ஒருசிறிதையே அவை எடுத்துக் காட்டுகின்றன. கடைசியில் இந்தப் போராட்டம் க்ஷத்திரியர்களுக்கு வெற்றியாக முடிந்தது; ஞானத்திற்கு, தாராள மனப்பான்மைக்கு வெற்றியாக முடிந்தது; சடங்குகள் ஒழிந்தன, இவற்றுள் பெரும்பாலானவை பின்னால் தலைதூக்கவேயில்லை. இந்தப் பெரிய எழுச்சியைத்தான் பௌத்தச் சீர்திருத்தம் என்று அழைக்கிறோம். இந்தச் சீர்திருத்தம், மதத்தைப் பொறுத்தவரையில் சடங்குகளிலிருந்து விடுதலையளிக்கின்ற சின்னமாக விளங்கியது; அரசியலைப் பொறுத்தவரையில் புரோகிதர்களை க்ஷத்திரியர்கள் வெற்றி கண்டதன் அடையாளமாக இருந்தது.
பண்டைய இந்தியாவில் தோன்றிய இரு மாபெரும் மனிதர்களான கிருஷ்ணரும் புத்தரும் க்ஷத்திரியர்களே என்பது குறிப்பிடத்தக்க உண்மை . இதைவிடச் சிறப்பு என்னவென்றால் இந்த இரண்டு தெய்வ மனிதர்களும் ஜாதி மற்றும் பால் வேறுபாடின்றி அனைவருக்கும் ஞானத்தின் வாசலைத் திறந்துவிட்டார்கள் என்பதுதான்.
புத்த மதம் அற்புதமான ஒழுக்க பலத்தைப் போதித்தாலும், ஏற்கனவே இருந்த நம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்ப்பதாக இருந்தது; அதனுடைய சக்தியின் பெரும்பகுதி, ‘இது கூடாது, அது கூடாது’ என்று தடுப்பதிலேயே செலவிடப்பட்டது; எனவேதான் பிறந்த பூமியிலேயே அது மடிய நேர்ந்தது. அதில் எஞ்சிய பகுதி மூடப் பழக்கவழக்கங்களும் சடங்குகளும் நிறைந்ததாக இருந்தது. எந்த மூடப் பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் அது ஒழிக்க நினைத்ததோ அதைப் போன்று நூறு மடங்கு அதில் பெருகியது. வேதங்களில் கூறப்பட்ட மிருக பலியை ஒழித்துக்கட்டுவதில் அது ஓரளவு வெற்றிபெற்றது என்றாலும், நாட்டை கோயில்கள், விக்கிரகங்கள், மதச் சின்னங்கள், மகான்களின் எலும்புகள் ஆகியவற்றால் நிறைத்தது.
இவற்றிற்கெல்லாம் மேலாக, ஆரியர்கள், மங்கோலியர்கள், பழங்குடி மக்கள் ஆகியோரை இணைத்துத் தாறுமாறான கலப்பை உண்டாக்கியதில் சில கோரமான வாமாச்சாரங்களுக்கு அது தன்னையறி யாமலே இடமளித்துவிட்டது. அந்த மாபெரும் ஆச்சாரியரின் போதனைகளின் நகைப்பிற்கிடமான போலியை, ஸ்ரீசங்கரரும் அவரைப் பின்பற்றிய சன்னியாசிகளும் வெளியே துரத்த நேர்ந்ததன் முக்கியக் காரணம் இதுவே.
இவ்வாறாக, இதுவரை தோன்றியவர்களுள் மாபெரும் மனிதரான பகவான் புத்தராலேயே தொடங்கிவைக்கப்பட்ட ஒரு ஜீவநதி நச்சு நதியாகியது. எனவே சங்கரரும், அவரைத் தொடர்ந்து ராமானுஜரும் மத்வரும் பிறக்கும்வரை பல நூறுஆண்டுகள் இந்தியா காத்துக்கிடக்க நேரிட்டது.
இந்த வேளையில் இந்திய வரலாற்றில் முற்றிலும் புதிய ஓர் அத்தியாயம் தொடங்கிற்று. புராதன க்ஷத்திரியர்களும் பிராமணர்களும் மறைந்தார்கள்.
புத்தமத இயக்கத்தில் க்ஷத்திரியர்கள்தான் உண்மை யான தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் கூட்டங் கூட்டமாகப் புத்த மதத்தில் சேர்ந்தார்கள். சீர்திருத்தத் திலும் மதமாற்றத்திலும் அவர்களுக்கிருந்த ஆர்வத்தில், சம்ஸ்கிருதத்தைப் புறக்கணித்துவிட்டு மக்களுக்குப் புரிகின்ற வட்டார மொழிகளை உருவாக்கினார்கள். இதனால் க்ஷத்திரியர்களில் பெரும்பாலோருக்கு சம்ஸ் கிருதக் கல்வியோ, வேத அறிவோ இல்லாமல் போய் விட்டது. இவ்வாறு தென்னிந்தியாவிலிருந்து வந்த இந்தச் சீர்திருத்த அலை புரோகிதத்துவத்திற்கும்புரோகிதர்களுக்கும் மட்டுமே ஓரளவு பலன் அளித்தது. இந்தியாவின்மற்ற கோடிக்கணக்கானமக்களைப்பொறுத் தவரையில், அவர்கள் அதற்கு முன்பு அறிந்திராத அதிக மான கை விலங்குகளை அது மாட்டியதுதான் மிச்சம்.
க்ஷத்திரியர்கள் எப்போதுமே இந்தியாவின் முது கெலும்பாகவும், விஞ்ஞானம் சுதந்திரம் ஆகியவற்றின் ஆதரவாளர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்; இந்தியாவில் மூட நம்பிக்கைகளை அகற்ற மீண்டும் மீண்டும் குரல் எழுப்பியிருக்கிறார்கள்; இந்தியாவின் வரலாறு முழுவதிலும், ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் புரோகிதர்களின் கொடுங்கோன்மை ஏற்பட்டபோது, அதை வெற்றிகரமாகத் தடுக்கின்ற அரணாக விளங்கி வந்திருக்கிறார்கள்.
க்ஷத்திரியர்களில் ஒரு பெரும் பகுதியினர் அறியாமை யில் மூழ்கியிருந்தனர், மற்றொரு பகுதியினர் மத்திய ஆசியாவிலிருந்து வந்த அநாகரீக மக்களுடன் கலந்து, புரோகிதர்களின் ஆட்சியை நிலைநிறுத்தத் தங்கள் வாள்பலத்தை அளித்தபோது பாரதத் தாயின் கோப்பையில் விஷம் நிரம்பியது, பாரத பூமியும் கீழே சாய்ந்தது. இந்த மயக்கத்திலிருந்து க்ஷத்திரியர்கள் தெளிந்து எழுந்து, தம்மைத்தாமே விடுவித்துக்கொண்டு, மற்றவர்களின்காலைப் பிணைத்திருந்த சங்கிலிகளையும் அறுத்தெறியும்வரை.