I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
3. பக்தியோகத்தின் எளிமையும் ரகசியமும்
‘கிருஷ்ணா! உன்னையே இடைவிடாது ஆழ்ந்து சிந்தித்து வழிபட்டு வரும் பக்தர்கள், நிர்க்குண பிரம்மத்தை வழிபடும் ஞானிகள் இவர்களுள் சிறந்த யோகி யார்?’ என்று அர்ஜுனன் கேட்டான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்: ‘யார் தங்கள் மனத்தை என்மீது நிலைநிறுத்தி என்னிடம் அசைக்க முடி யாத நம்பிக்கையுடன் எப்போதும் என்னை வழிபடுகிறார் களோ அவர்களே சிறந்த பக்தர்கள்; அவர்களே சிறந்த யோகி கள். சொற்களால் விளக்க முடியாத, புலன்களை வெற்றி கொண்டு, சமநோக்குடையவர்களாக, உயிரினங்களுக்கு நன்மை செய்பவர்களாக இருந்து, வேறுபாடற்ற, அனைத்தையும் அறி கின்ற அசைவற்ற, என்றுமுள்ள பரப்பிரம்மத்தை, முழுமுதற் பொருளாகிய, என்னை வழிபடுபவர்கள் என்னை வந்தடை கின்றனர். மன வாக்குகளுக்கு எட்டாத முழுமுதற் பொருளாகிய பிரம்மத்திடம் யாருடைய மனம் நாட்டம் கொள்கிறதோ, அவனது பாதையில் போராட்டங்கள் அதிகம். உடலுணர்வு மிக்க மனிதனுக்கு பிரம்மத்தைத் தேடி அடையும் பாதை மிகக் கடினமானது. தான் செய்துவரும் செயல்கள் அனைத்தையும் எனக்கு அளித்து என்னையே தஞ்சமாகக் கொண்டு, வேறு எதனிடமும் பற்றின்றி, என்னையே தியானித்து வருபவனை, தொடர்ந்து வரும் பிறப்பு-இறப்பு என்னும் சம்சாரக் கடலி லிருந்து நான் விரைவில் உயர்நிலை அளிக்கிறேன்.’
இங்கே ஞானயோகம், பக்தியோகம் என்ற இரண்டும் குறிப்பிடப் படுகின்றன. இரண்டுமே மேலே கண்ட பகுதியில் விளக்கப்படுவதாகக் கொள்ளலாம். ஞானயோகம் சிறந்தது, மிக உயர்ந்த தத்துவம். ஞானயோகம் கூறுகின்ற எல்லா நிபந் தனைகளையும் நிறைவேற்றி வாழ முடியும் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். வேடிக்கைதான்! ஆனால் அத்தகைய ஒரு தத்துவ வாழ்க்கை வாழ்வது உண்மையில் மிகவும் கடினமானது. தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்வது பலவேளைகளில் பேராபத்தில் கொண்டுபோய் விடலாம்.
உலகினரை இரு வகையாகப் பிரிக்கலாம். அரக்க இயல்பு கொண்ட மக்கள் ஒருவகையினர். இவர்களுக்கு வாழ்க்கையில் முதலும் முடிவும் உடம்பைப் பேணுவதுதான். தெய்வீக இயல் பினர் மற்றொரு வகையினர்; உடம்பு என்பது ஒரு லட்சியத்தை அடைவதற்கும், ஆன்மாவைப் பண்படுத்துவதற்குமான கருவி மட்டுமே என்பதை இவர்கள் உணர்கின்றனர். முதல் வகையைச் சார்ந்தவனான மனிதப் பேய்கூடச் சுயநலத்திற்காக சாஸ்திர மேற்கோள்களை அள்ளி வீசலாம். நல்லவனின் செயல்களுக்குத் தூண்டுகோல்போல் இருக்கும் ஞானநெறி, தீயவனின் செயல்களுக்கு ஒப்புதல் அளிப்பதுபோல் தோன்றக்கூடும். இதுவே ஞானயோகத்தில் வரக்கூடிய பேராபத்து.
ஆனால் பக்தியோகமோ இயற்கையானது, இனிமை யானது, மென்மையானது. பக்தன் ஞானயோகியைப்போல் மிக உயரே செல்வதில்லை ; அதனால் கீழே விழுவதும் அதிக மில்லை. சாதகன் எந்த வழியைக் கடைப்பிடித்தாலும் சரி, ஆன்மாவின் தளைகள் நீங்கும்வரை, முக்தி கிடைக்காது.
பேறு பெற்றவளான கோபிகை ஒருத்தியின் மனத்தைக் கட்டுப்படுத்திய நன்மை, தீமை என்ற விலங்குகள் எப்படி அறு பட்டு வீழ்ந்தன என்பதைக் கீழ்வரும் பகுதி காட்டுகிறது: ‘இறைவனைத் தியானித்ததன் காரணமாகப் பெற்ற பேரானந்தம் அவள் இதுவரை செய்த நல்வினைகளின் தளைகளைப் போக் கியது. இறைவனை அடையாததால் அவளது ஆன்மா அனு பவித்த கொடிய பிரிவுத் துன்பம் அவளுடைய தீவினைகளை அழித்தது. அவள் முக்தி பெற்றாள்- தச்சிந்தாவிபுலா ஹ்லாத rண புண்யசயா ததா | ததப்ராப்தி மஹத்து:க விலீனாசேஷ பாதகா || நிருச்ச்வாஸதயா முக்திம் கதான்யா கோபகன்யகா ||”
பக்தியோகத்தின் அடிப்படை ரகசியம் இதுவே. மனித இதயத்தில் எழுகின்ற பலவகை விருப்பங்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள் முதலிய எதுவும் தன்னளவில் தவறானவை அல்ல; ஆனால் அவை உயர்நிலையை அடையும்வரை, அவற்றைக் கவனமாகக் கட்டுப்படுத்தி அந்த உயர்நிலையை நோக்கிப் படிப்படியாக இட்டுச் செல்ல வேண்டும். நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்வதே மகத்தான நெறி. மற்ற நெறிகள் எல்லாம் கீழானவை.
இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தது வாழ்க்கை. வாழ்க்கையில் இரண்டும் மாறிமாறி வருகின்றன. செல்வமோ வேறெந்த உலகப் பொருளுமோ தன்னிடம் இல்லையென்பதற் காக வருந்துபவன் தன் உணர்ச்சிகளைத் தவறான பாதையில் செலுத்துகிறான். ஆனால் துன்பங்களாலும் பயன் உண்டு. ‘நான் உயர்நிலை எய்தவில்லையே, இறைவனை அடைய முடிய வில்லையே’ என்று ஒருவன் வருந்தட்டும். இந்த வருத்தம் அவனை முக்திப் பாதையில் அழைத்துச் செல்லும். கைநிறையப் பணம் இருக்கிறது என்று நீ மகிழ்ந்தால், அது மகிழ்ச்சிக்குத் தரப்பட்ட தவறான போக்கு. அதை உயர்நோக்கில் திருப்ப வேண்டும். அது மிகமிக உன்னதமான லட்சியத்திற்குப் பயன் பட வேண்டும். அத்தகைய லட்சியத்தில் இன்பம் காண்பது தான் உண்மையில் மேலான இன்பம். மற்ற உணர்ச்சிகளுக்கும் இது பொருந்தும். அவற்றுள் ஒன்றுகூடத் தவறில்லை என் கிறான் பக்தன். உணர்ச்சிகளையெல்லாம் தன் வசப்படுத்தி, எந்தத் தவறும் நிகழாமல் இறைவனை நோக்கித் திருப்புகிறான் அவன்.