4. தன்னலமற்ற செயலே உண்மைத் துறவு
இந்த உலகம் கோழைகளுக்காக அல்ல. தப்பியோட முய லாதே. வெற்றியையோ தோல்வியையோ எதிர்பார்க்காதே. முழுமையான தன்னலமற்ற சங்கல்பத்துடன் உன்னை இணைத் துக்கொண்டு வேலையில் ஈடுபடு. வெற்றி பெறவே தோன்றி யுள்ள மனம் தன்னைத் திடசங்கல்பத்துடன் இணைத்துக் கொண்டு முனைந்து முன்னேறுகிறது என்பதை உணர்ந்து கொள். வேலை செய்ய உனக்கு உரிமை இருக்கிறது. ஆனால் பலனை எதிர்பார்க்கும் அளவுக்குக் கீழ்மை அடையாதே. ஓயாமல் உழை. ஆனால் அந்த வேலைக்கு அப்பால் இருக்கும் ஒன்றைப் பார்க்கக் கற்றுக்கொள். நல்ல செயல்கள்கூட ஒரு மனிதனைப் பந்தத்தில் பிணைத்துவிடும். ஆகையால் நற்செயல் களிலோ, பெயர்புகழ் தேடும் விருப்பத்திலோ உன்னைப் பந்தப் படுத்திக் கொள்ளாதே. இந்த ரகசியத்தை அறிந்தவர் பிறப்பு இறப்புச் சுழலைத் தாண்டி, மரணமிலா நிலையை அடை கின்றனர்.
சாதாரணத் துறவி உலகத்தைத் துறந்து வெளியே சென்று கடவுளைப்பற்றி நினைக்கிறான். உண்மைத் துறவி உலகத் திலேயே வாழ்கிறான்; ஆனால் உலகால் கட்டுப்படுத்தப் படாத வனாக இருக்கிறான். தங்களை மறுத்துக் காடு சென்றும், நிறைவுறாத ஆசைகளை எண்ணியெண்ணி இன்பமடைப் வர்கள் உண்மைத் துறவிகள் அல்ல. வாழ்க்கைப் போரின் மத்தி யில் வாழ். குகையில் வாழும்போதும், தூங்கும்போதும் யாரும் அமைதியாக இருக்க முடியும். செயல்வெறி என்னும் சுழலில் நின்று, மையத்தைச் சென்று சேர். மையத்தை அடைந்து விட்டால், உலகில் உன்னை எதுவும் அசைக்க முடியாது.