6. சமூதாய மாற்றம் கட்டாயத்தினாலா அல்லது அமைதியாகவா செய்யப்பட வேண்டும்?
பணக்காரன் ஏழையைக் கொடுமைப்படுத்தும் போது ஏழைக்கு வேண்டிய மருந்து வலிமை.
கீழ்நிலை மக்கள் விழித்துவிட்டார்கள். இந்த நிலைமைக்கு எதிராக ஒரே அணியாகத் திரண்டு, நியாயப்படித் தங்களுக்குத் தரப்பட வேண்டிய பங்கைப் பெறுவதற்கு உறுதி பூண்டுவிட்டார்கள். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழி லாளர்கள் விழிப்புற்று, அதற்குப் பாதையும் வகுத்து விட்டார்கள். இந்தியாவிலும் அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. இப்போது நம் நாட்டில் நடக்கும் பல வேலை நிறுத்தங்கள் அதையே காட்டு கின்றன. இனி உயர்ந்த ஜாதி மக்கள் தலைகீழாக நின்றாலும் தாழ்ந்த ஜாதியினரை அடக்கி நசுக்க முடியாது. அவர்கள் தங்களுக்குரிய நியாயமான உரிமை களைப் பெற உதவி செய்வதுதான் உயர்ஜாதியினருக்கு இனி நல்லது. .
‘எனவே பாமர மக்களிடையே கல்வியைப் பரப்பும் வேலையைத் துவக்கு என்று உன்னிடம் நான் சொல்கிறேன். “நீங்கள் எங்கள் உடன்பிறந்தவர்கள். எங்கள் உடம்பின் ஒரு பகுதி. நாங்கள் உங்களிடம் அன்பு செலுத்துகிறோம். உங்களை ஒருபோதும் வெறுக்க மாட்டோம்” என்று அவர்களுக்குப் புரிய வையுங்கள். அவர்களுக்கு உங்களுடைய இந்தப் பரிவும் அன்பும் கிடைத்தால் ஆயிரம் மடங்கு உத்வே கத்துடன் அவர்கள் வேலை செய்வார்கள். நவீன விஞ்ஞானத்தின் துணையுடன் அவர்களது அறிவைத் தூண்டிவிடுங்கள். வரலாறு, புவியியல், விஞ்ஞானம், இலக்கியம் முதலியவற்றுடன் மதத்தின் உண்மை களையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். கல்வியை அளிப்பதன் பலனாக, ஆசிரியர்களாகிய உங்கள் வறுமையும் தீரும். இப்படி ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதன்மூலம் இருசாராரிடமும் நட்பும் பெருகும்.’
அது நடக்காவிட்டால் உங்களுக்கு முன்னேற்றம் இல்லை. இதுவரை நெடுங்காலமாக நீங்கள் செய்து வருகின்ற போராட்டங்களாலும் சச்சரவுகளாலும் அழிந்துவிடுவீர்கள். பாமர மக்கள் விழித்தெழுந்து, உங்கள் சுரண்டலையும் அடக்கு முறையையும் புரிந்துகொண்டால், ஒரு மூச்சில் உங்களைப் பறக்கடித்து விடுவார்கள். அவர்கள்தாம் உங்களிடையே நாகரீகத்தைப் புகுத்தினார்கள். எதிர்காலத்தில் அதை உடைத்தெறியப் போவதும் அவர்கள்தான். மகோன்னதமான ரோமப் பேரரசும் நாகரீகமும் கௌல் ஜாதியினரால் எப்படித் தூள்தூளாகியது என்பதை எண்ணிப் பார். அதனால் தாழ்ந்த மக்களுக்கு கல்வி யையும் பண்பாட்டையும் அளித்து அவர்களை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய். அவர்கள் விழித்து எழுந்தால் நிச்சயம் ஒருநாள் விழித்து எழத்தான் போகிறார்கள் அப்போது நீங்கள் அவர்களுக்குச் செய்த உதவியை மறக்காமல் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.’