3. புரட்சியை யார் ஆரம்பித்து வழி நடத்துவது?
மக்கள் மக்களால் உயர்வதுதான் புதிய முறை.
இளைய தலைமுறையினரிடமே, நவீன தலை முறையினரிடமே எனது நம்பிக்கை இருக்கிறது. அதி லிருந்தே எனது தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கக் குட்டிகளைப்போல் அவர்கள் இந்த முழுப்பிரச்சினைக் கும் தீர்வு காண்பார்கள். எனது கருத்தை வகுத்துவிட் டேன், அதற்காக எனது வாழ்வையே அர்ப்பணித்து விட்டேன். இதில் நான் வெற்றி காணாவிட்டால், என்னைவிடத் திறமைசாலி ஒருவர் தோன்றிச் செயல் படுத்துவார். போராடியதே எனக்குப் போதுமானது.
பாமர மக்களுக்கு உரிய உரிமைகளை அளிப்பதே முதல் பிரச்சினை. உலகம் கண்ட மதங்களுள் மிகவும் சிறந்தது உங்கள் மதம். ஆனால் பாமர மக்களுக்கு நீங்கள் அளிப்பதோ சாரமற்ற முட்டாள்தனத்தை.
மற்ற நாடுகளின் பாமர மக்களைப் பார்க்கும் போது நமது மக்கள் தெய்வங்களே. அவர்கள் தன்னம் பிக்கையை இழந்துவிட்டார்கள்; தங்களைப் பிறவியி லேயே அடிமைகள் என்று கருதுகிறார்கள். உரிய உரிமைகளை அவர்களுக்கு அளியுங்கள், அவர்கள் தங்கள் சொந்த உரிமைகளைச் சார்ந்து நிற்கட்டும்.
இளைஞர்களால்தான் இதைச் செய்ய முடியும். இளமைத் துடிப்பு நிறைந்த, ஆற்றல் மிக்க, வலிமை வாய்ந்த, உரமேறிய உடல் கொண்ட, அறிவு நிறைந்த’ – இவர்களுக்கே இந்தப் பணி.
இளைஞர்களே, பணக்காரர்களையும் பெரியவர் களையும் எதிர்பார்த்து நிற்காதீர்கள். உலகில் மாபெரும் காரியங்களை எல்லாம் சாதித்தது ஏழைகள்தாம்.
ஏழைகளே! முன்வாருங்கள். நீங்கள் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் எல்லாவற்றையும் சாதிக்க வேண்டும். நீங்கள் ஏழைகளாக இருக்கலாம், ஆனாலும் உங்களைப் பலர் பின்பற்றுவார்கள். உறுதி யாக இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையுடன் இருங்கள். உங்கள் விதியில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
இந்தியாவின் கதிமோட்சத்திற்காக உழைக்க வேண்டியவர்கள் வங்கத்து இளைஞர்களே. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்றோ நாளையோ இது நிகழ்ந்துவிடும் என்று எண்ணாதீர்கள். எனது சொந்த உடலையும் ஆன்மாவையும் நம்புவதுபோல் இதை நான் நம்புகிறேன். எனவே வங்க இளைஞர்களே! என் இதயம் உங்களிடம் செல்கிறது.
ஏழைகளாகிய உங்களைப் பொறுத்தே அது உள்ளது. உங்களிடம் பணமில்லை , அதனால் நீங்கள் உழைப்பீர்கள். உங்களிடம் ஒன்றுமில்லை, எனவே நீங்கள் நேர்மையுடன் இருப்பீர்கள். நேர்மை இருப்பதால் எல்லாவற்றையும் துறக்கச் சித்தமாயிருப்பீர்கள். அதைத் தான் நான் இப்போது உங்களிடம் சொல்கிறேன். மீண்டும் சொல்கிறேன், இதுவே உங்கள் வாழ்வின் பணி, என் வாழ்வின் பணி.