2. புரட்சி யாருக்காக?
நாடு குடிசைகளில் வாழ்கிறது என்பதை நினை வில் வையுங்கள்…. ஒரு நாட்டின் விதியை நிர்ணயிப் பது பாமர மக்களின் நிலை. உங்களால் அவர்களை உயர்த்த முடியுமா? தங்களிடம் இயல்பாக உள்ள ஆன்மீகப் பண்பை இழக்காமல், தாங்கள் இழந்த தனித்துவத்தை அவர்களுக்கு நீங்கள் மீண்டும் பெற்றுத் தர முடியுமா?
யாருடைய உடலுழைப்பின் காரணமாக பிராமண னுக்குச் செல்வாக்கும், க்ஷத்திரியனுக்கு வீரமும், வைசியனுக்குச் செல்வமும் உண்டாயிற்றோ அவர்கள் எங்கே? சமுதாயத்தின் முக்கிய பகுதியாக இருந்தும், எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் ‘ஜகன்ய ப்ரபவோ ஹி ஸ:- அவன் இழிகுலத்தில் பிறந்தவன்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்களே அவர்களின் கதை என்ன? கல்வியும் அறிவும் பெற விரும்பிய ‘மிகப் பெரிய குற்றத்திற்காக’, ‘நாக்கை வெட்டுதல், உடலைக் கூறுபோடுதல்’ போன்ற ‘மிக எளிய’ தண்டனைகள் கொடுக்கப்பட்டதே, அந்த இந்தியாவின் ‘நடைப் பிணங்களும்’ மற்ற நாடுகளின் ‘பாரம் சுமக்கும் மாடுகளு மான சூத்திரர்கள், அவர்களின் நிலை என்ன?