14. இந்திய நாகரிகம்- அதைப் பாதுகாத்து வளர்த்தல்
அருவியொன்று இமாலயத்தில் உற்பத்தியாகி யுக யுகாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஓடத் தொடங்கியது எப்போதென்று யாருக்கும் தெரியாது. அந்த அருவியைத் தடுத்துத் திருப்பி அது உற்பத்தியான இடத்துக்குக் கொண்டு போக முடியுமெனக் கருதுகிறீர்களா? அம்முயற்சி சாத்தி யமானால் கூட நீங்கள் ஐரோப்பிய நாகரிகத்தை மேற்கொள்ளுதல் இயலாத காரியமாகும். ஐரோப் பிய நாகரிகம் பிறந்து வளரத் தொடங்கிச் சில நூற்றாண்டு காலமே ஆகிறது. அந்நாகரிகத்தையே மேனாட்டார் துறக்க இயலவில்லையென்றால், எவ் வளவோ நூற்றாண்டு காலமாக ஒளிவீசித் திகழ்ந்து வரும் உங்கள் நாகரிகத்தை நீங்கள் எங்ஙனம் கை விட இயலும்?
இந்தியாவில் நமது முன்னேற்ற மார்க்கத்தில் குறுக்கிடும் இரண்டு பெரிய தடைகள் இருக்கின்றன ஒன்று பழைய குருட்டு வைதிகம்; மற்றொன்று நவீன ஐரோப்பிய நாகரிகம். என்னைக் கேட்டால் இவ்வி ராண்டினுள் பழைய குருட்டு வைதிகமே மேல் என் பேன். பழைய வைதிகன் ஒருவன் அறியாமையில் மூழ்கியவனாயிருக்கலாம்; பயிற்சியற்றவனாயிருக்க லாம். ஆனாலும் அவன் ஆண் மகன்; அவனுக்கு நம்பிக்கையுண்டு; பலமுண்டு; அவன் தன் வலிமை கொண்டு தான் – நிற்கிறான். ஐரோப்பிய நாகரிக வயப்பட்ட மனிதனோ முதுகெலும்பற்றவன். அவன் பற்பல இடங்களிலிருந்தும் பகுத்தறிவின்றிப் பொறுக்கிய கருத்துக்களின் கலப்புப் பிண்டமாவான். இக்கருத்துக்களை அவன் ஜீரணித்துக் கொள்வதில்லை அவற்றின் சாராம்சத்தைக் கிரஹிப்பதில்லை, முரண் பட்ட அக்கருத்துக்களினால் அவன் உள்ளம் அமைதி யின்றி அலைக்கப் பெறுகின்றது.
ஐரோப்பிய நாகரிக வயப்பட்ட இந்தியன் நமது பழக்க வழக்கங்களில் சிலவற்றைத் தீமை யென்று சொல்கிறான். இதற்கு அவன் கூறும் கார ணம் யாது? ஐரோப்பியர்கள் அப்படிச் சொல்கிறார் கள் என்பது தான்! நான் இதற்கு ஒருப்படேன், இருந்தாலும், இறந்தாலும் நமது சொந்த பலங் கொண்டு நாம் நிற்றல் வேண்டும்.
இந்த நிதானமில்லாத பிராணிகள் (ஐரோப் பிய நாகரிகத்திலாழ்ந்த இந்தியர்கள்) இன்னும் தங் களுக்கென்று தனித்த நிலை ஒன்று எய்தவில்லை. அவர்களை என்ன வென்று நாம் அழைப்பது? ஆண் களென்றா, பெண்களென்றா, விலங்குகளென்றா?
நன்மைக்கோ, தீமைக்கோ, நமது உயிர் நிலை நமது மதத்தில் அமைந்திருக்கிறது. அதை உங்க ளால் மாற்ற முடியாது. மதத்தை அழித்துவிட்டு அதனிடத்திற்கு வேறொன்றைக் கொண்டுவரவும் முடியாது. பெரிதாக வளர்ந்துவிட்ட மரம் ஒன்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தில் பெயர்த்து நட்டு அங்கே உடனே வேர்கொள்ளச் செய்ய முடியுமா?
உண்ணலும், குடித்தலும், களியாட்டயர் தலுமே மனித வாழ்க்கையின் இலட்சியம் என்று இந்தியா வில் ஒருவன் போதனை செய்வானாயின்–இந்தச் சதி உலகையே ஆண்டவனாக்க முயல்வானாயின்,–அவன் உடனே பொய்யனாகிறான். இப்புண்ணிய பூமியில் அவனுக்கு இடமில்லை. இந்திய மக்கள் அவனுக்குச் செவிசாய்க்க ஒருப்படார்கள்.
மற்ற நாட்டாரின் ஸ்தாபனங்களை நான் நிந் திக்கவில்லை. அந்த ஸ்தாபனங்கள் அவர்களுக்கு நல் லவை; ஆனால் நமக்கு நல்லவையல்ல. அவர்களுக்கு உணவாயிருப்பது நமக்கு விஷமாகலாம். நாம் கற்று கொள்ள வேண்டிய முதற்பாடம் இதுவாகும்.
இந்தியாவை இங்கிலாந்தைப் போல் ஆக்கி விடப் புத்தியுள்ள மனிதன் எவனும் கருதமாட்டான். எண்ணத்தின் வெளித் தோற்றமாக அமைவதே உடம்பு. அவ்வாறே சமூக வாழ்வும் தேசீய உள்ளத்தின் வெளித் தோற்றமேயாகும். இந்தியா வில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் சிந்தனையி னால் சமூக வாழ்வு அமைந்திருக்கிறது. எனவே இந் தியாவை ஐரோப்பிய நாகரிகவயப்படுத்தல் இய லாத காரியம். அதற்காக முயலுதல் அறிவீனம்.
மேனாட்டார் நம்மினின்றும் வேறான சாஸ்தி ரங்களும், பரம்பரை தர்மங்களும் உடையவர்கள். அவற்றிற் கிணங்க அவர்கள் தற்போது ஒருவகை வாழ்க்கை முறையைப் பெற்றிருக்கின்றனர். நமக் குச் சொந்தமான பரம்பரை தர்மம் இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்த கர்மம் நமக்கு பின்னால் இருக்கிறது. எனவே நாம் நமது சொந்த வழியிலேயே செல்லக்கூடும். அதுவே இயற் கையாகும்.
நமது முன்னேற்ற மார்க்கத்திலே பல அபா யங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, உலகில் நம்மைத் தவிர வேறு ஜனங்கள் இல்லை யென்றெண் ணிக் கண்ணை மூடிக் கொள்வதாகும். பாரத நாட் டினிடம் எனக்கு அளவற்ற அன்புண்டு. நமது முன் னோர்களை நான் போற்றுகிறேன்; தேச பக்தியில் நான் குறைந்தவனல்லன். ஆயினும் மற்ற நாட் டாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உண்டென்பதை நான் ஒப்புக் கொண்டே தீரவேண்டும். எனவே, எல்லாருடைய காலடியிலும் உட்கார்ந்து உபதேசம் பெற நாம் சித்தமாயிருக்க வேண்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்வதற்குரிய சிறந்த பாடங்கள் உண்டு .
மேனாட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண் டிய விஷயங்கள் பல இருக்கின்றன. மேனாட்டாரின் கலைகளையும், பூதபௌதிக சாஸ்திரங்களையும் அவர் களிடமிருந்து நாம் கற்றறிதல் வேண்டும். புற உல கைப்பற்றிய விஷயங்களையெல்லாம் அவர்களிட மிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஆனால் சமயத்திற்கும், பாரமார்த்திக ஞானத்திற்கும் அவர் கள் நம்மிடம் வரவேண்டியவர்களாவர்.
வெளி உலகத்துடன் தொடர்பின்றி நாம் உயிர் வாழ முடியாது. அப்படி வாழ முடியும் என்று எண்ணியது நமது மடமையாகும். அதற்குரிய தண் டனையை ஓராயிரம் ஆண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து நாம் அனுபவித்துவிட்டோம். நமது நிலையைப் பிற தேசத்தாரின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க நாம் வெளியே போகாததும், நம்மைச் சுற்றிலும் நடந்து வந்த காரியங்களைக் கவனியாததும், இந்தியர் தாழ் வடைந்ததற்கு ஒரு பெரிய காரணமாகும். இந்தி யர்கள் இந்தியாவை விட்டு வெளியே போகக்கூடா தென்பது போன்ற மூடக் கொள்கைகள் குழந்தைத் தனமானவை. அவற்றை மண்டையில் அடித்துவிட வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் வெளியே சென்று பிற நாட்டாரிடையே பிரயாணம் செய் கிறீர்களோ அவ்வளவுக்கு உங்களுக்கும் உங்கள் நாட்டுக்கும் நன்மையுண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன் பிருந்தே நீங்கள் அவ்வாறு செய்து வந்திருந் தால் இன்று இந்நிலையில் இருக்க மாட்டீர்கள். இந் தியாவை ஆள விரும்பிய ஒவ்வொரு நாட்டாருக்கும் அடிமையாகியிருக்க மாட்டீர்கள்.
என் மகனே! எந்த மனிதனாவது, எந்த தேச மாவது பிறரைப் பகைத்து உயிர் வாழமுடியாது. என்றைய தினம் இந்நாட்டில் மிலேச்சன் என்னும் வார்த்தையைச் சிருஷ்டித்தார்களோ, என்றைய தினம் பிறருடன் கலந்து பழகுவதை நிறுத்தினார் ளோ அன்றே இந்தியாவுக்கு அழிவு காலம் தோன் றிற்று. எனவே எச்சரிக்கை! அத்தகைய கொள்கை களை வளர்த்தல் வேண்டாம். வாயினால் வேதாந்தம் பேசுதல் எளிது, ஆனால் வேதாந்தத்தின் மிகச்சிறு போதனைகளையும் செயலில் கொணருதல் மிக அரிது.
நாம் யாத்திரை செய்ய வேண்டும். வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டும். மற்ற நாடுகளில் சமூக வாழ்வு எவ்வாறு நடைபெறுகிறதென்று பார்க்க வேண்டும். பிற நாட்டாரின் மனப்போக் கைக் கவனித்து அவர்களுடைய சிந்தனைகளுடன் நாம் சுதந்திர மான தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் மீண்டும் ஒரு பெரிய ஜாதியாராக உயிர்த்தெழல் முடியும்.
உங்களுடைய பலங்கொண்டு நில்லுங்கள். ஆனால் கூடுமானவரை வெளியிலிருந்து வலிமை பெற்று அதை உங்களுடைய தாக்கிக் கொள்ளுங் கள். வெளி நாட்டார் ஒவ்வொருவரிடமிருந்தும் உங் களுக்கு உபயோகமான விஷயங்களைக் கற்றுக்கொள் ளுங்கள். ஆனால் ஹிந்துக்களாகிய நமக்கு நமது தேசீய இலட்சியங்களே முதன்மையானவை. மற்ற வையெல்லாம் இரண்டாந்தரம், மூன்றாந்தரமேயா கும் என்பதை நினைவு கூருங்கள்.