13. சாதிப் பிரச்னை சமூகத்திற்கே சாதி-சமயத்திற்கு அன்று
சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடேயாகும். மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும், மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்நாட்டில் சந்நியாசியா கலாம். அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன.
சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சம யத் தொடர்புடையனவாக வெளிக்குத் தோன்றிய போதிலும் உண்மையில் அவை அத்தகையனவல்ல. நம்மை ஒரு தனி சமூகமாகக் காப்பாற்றி வருவதற்கு அவ்வேற்பாடுகள் அவசியமாயிருந்து வந்திருக்கின் றன. தற்காப்புக்கு அவசியம் இல்லை யாகும்போது அவை இயற்கை மரண மடைந்து மறையும்.
கௌதம புத்தர் முதல் ராம்மோஹன் ராய் வரையில் (சீர்திருத்தக்காரர்) எல்லோரும் ஒரு தவறு செய்திருக்கிறார்கள். அவர்கள் சாதியை சமய ஸ்தாபனமாகக் கொண்டு சாதி, சமயம் எல்லாவற் றையும் சேர்த்து அழித்துவிட முயன்றார்கள். எனவே அவர்கள் அடைந்தது தோல்வியேயாகும். புரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் சரியே, சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடே என்பதில் சந்தேக மில்லை. அந்த ஸ்தா பானம் தன்னுடைய வேலையைச் செய்த பின்னர் இப்போது அழுகி நாற்றமெடுத் திருக்கிறது. இந்திய ஆகாய வெளியில் அந்நாற்றம் நிறைந்துளது.
சாதி ஏற்பாடு வேதாந்த மதத்துக்கு விரோத மானது. சாதி என்பது ஒரு வழக்கமேயல்லாது வேறில்லை. நமது பெரிய ஆசாரியர்கள் எல்லோரும் அதைத் தாக்க முயன்றிருக்கிறார்கள். புத்தர் காலத் திலிருந்து சாதிக்கு விரோதமாக அநேகர் பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையி லும் அது வலிமை பெற்று வந்ததேயன்றி வேறு பயனில்லை. இந்தியாவின் அரசியல் ஸ்தாபனங்களி லிருந்து வளர்ச்சி பெற்றதே சாதியாகும், அதைப் பரம்பரையான தொழிற் சங்க முறை என்று சொல் லலாம். ஐரோப்பாவுடன் நேர்ந்த தொழிற் போட்டி. யானது எந்த போதனையையும் விட சாதியை அதி கம் தகர்த்திருக்கிறது.
சாதி ஏற்பாட்டின் உட்கருத்து
ஐரோப்பிய நாகரிகத்திற்குரிய சாதனம் பலாத் காரமாகும். ஆரிய நாகரிகமோ வர்ண தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வர்ணப் பிரி வினை நாகரிக மென்னும் உச்சிக்கு ஜனங்களை அழைத்துச் செல்லும் படிக்கட்டாகும். ஒருவனு டைய கல்வியும், அறிவுப் பயிற்சியும் அதிகமாக ஆக அவன் அந்தப் படிக்கட்டின் மூலமாய் மேலே மேலே ஏறிக்கொண்டிருக்கிறான். ஐரோப்பிய நாகரி கத்தில் பலசாலிகளுக்கே வெற்றி; பலவீனர்கள் அழிந்து போக வேண்டியது தான். ஆனால் பாரத தேசத்திலோ ஒவ்வொரு சமூக விதியும் பலவீனர் களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்ட தாகும்.
சாதி என்பது நல்ல ஏற்பாடுதான். ஆனால் உண்மையில் சாதி என்றால் என்னவென்று லட்சத்தில் ஒருவர் கூட அறிந்து கொள்வதில்லை. உலகில் சாதி இல்லாத தேசமேயில்லை. இந்தியாவில் நாம் சாதி என்னும் கீழ்ப்படியில் தொடங்கி சாதியற்ற மேல் நிலையை அடைகிறோம். சாதி என்பது இந்தத் தத் துவத்தையே அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவில், பிராமணன் மக்கட் குலத்தின் இலக் கியமாவான். ஒவ்வொருவனையும் பிராமணனாக்குவது சாதி ஏற்பாட்டின் நோக்கமாகும். இந்திய சரித் திரத்தைப் படித்தால் கீழ் வகுப்பாரை மேலே கொண்டுவர எப்போதும் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருப்பதைக் காண்பீர்கள். பல வகுப்புகள் கை தூக்கி விடப்பட்டிருக்கின்றன. மற்றும் பல வகுப்பு களும் மேலே வந்து முடிவில் எல்லோரும் பிராம ணர்களாவார்கள். இதுவே சாதி ஏற்பாட்டின் நோக் கம். யாரையும் கீழே கொண்டுவராமல் எல்லோரை யும் நாம் மேலே தூக்கிவிட வேண்டும். இதைப் பெரிதும் பிராமணர்களே செய்தாக வேண்டும். எல்லா உரிமை பெற்ற கூட்டங்களும் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்ளுகிறார்கள். ஆகை யால் மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக உயர்த் துதலே அவர்கள் கடமையாகும். இதை எவ்வளவு விரைவில் செய்கிறார்களோ அவ்வளவுக்கு நன்மை.
ஆத்ம சாதனத்தையும் துறவு நெறியையும் மேற் கொண்ட பிராமணன் நமது இலக்கியமா வான். பிராமண இலட்சியம் என்றால் என்ன? உல கப்பற்று அறவே நீங்கி உண்மை ஞானம் குடி கொண்டுள்ள பிராம்மணீய இலட்சியத்தையே நான் குறிப்பிடுகிறேன். இதுவே ஹிந்து சமூகத்தின் இலட்சியமாகும்.
உலக முழுவதிலும் ஆரம்பத்தில் பிராமணர் களேயிருந்தார்களென்றும், அவர்கள் இழிவடையத் தொடங்கியபோது பற்பல சாதிகளாகப் பிரிந்தார்களென்றும், மீண்டும் கிருதயுக ஆரம்பத்தில் எல்லோரும் பிராமணர்களாவார்களென்றும் மகா பாரதத்தில் படிக்கிறோம். ஆதலின் சாதிப் பிரச்னை யைத் தீர்த்து வைப்பதற்கு வழி, ஏற்கனவே மேலே யுள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; உண்ணல், குடித் தல் விஷயங்களில் மூளை கெட்டுத் தடுமாறுவது மன்று; அதிக சுகா நுபவங்களுக்காக நமது கட்டுக் களை மீறி நடப்பது மன்று; நம்மில் ஒவ்வொரு வரும் வேதாந்த சமயத்தின் கட்டளைகளை நிறை வேற்றிப் பாரமார்த்திக வாழ்வு எய்தலும், உண் மைப் பிராமணராதலுமே வழியாகும்.
உங்கள் எல்லோருக்கும் விதிக்கப்பட்டுள்ள கட் டளை ஒன்று தான். அதாவது நீங்கள் அனை வரும் இடையில் நில்லாமல் முன்னேறிக் கொண்டே யிருத்தல் வேண்டும். மிக உயர் நிலையிலுள்ளவனிலி ருந்து மிகத் தாழ்ந்துள்ள பறையன் வரைக்கும் இந்நாட்டில் எல்லோரும் முயன்று உண்மைப் பிராமணர் ஆதல்வேண்டும்.
பின்னர் நாளடைவில் ஏற்பட்ட ஸ்மிருதிகளில், சிறப்பாக இக்காலத்திற்கு முழு அதிகாரம் உள்ள ஸ்மிருதிகளில், நாம் காண்பதென்ன? சூத்திரர்கள் பிராமணர்களுடைய பழக்க வழக்கங்களைக் கைக் கொண்டால் அவர்கள் நன்றே செய்கிறார்கள்; இவ்வழியில் அவர்களுக்கு ஊக்கமளிக்கவேண்டும் என்று கூறப்படுவதைக் காண்கிறோம். எல்லாச்சாதி களும் மெதுவாக, நிதானமாக, மேலே வரவேண்டு மென்பதே நோக்கமென்று பிர தயட்சமாகத் தெரிய வருகிறது. ஆயிரக்கணக்கான சாதிகள் இருக்கின் றன. அவற்றுள் சில பிரம்மண்ய பதவி அடைந்தும் இருக்கின்றன.
பிராமணனுடைய மகன் ஒவ்வொருவனும் பிராமணனாகவேயிருத்தல் வேண்டும்மென்னும் கட் டாயமில்லை. பிராமணனுடைய மகன் பிராமணன் ஆவது பெரிதும் சாத்தியமாயினும், அவன் பிராம ணனாகாமலும் போதல் கூடும், பிராமண சாதியும், பிரம்மண்ய குணங்களும் முற்றும் வேறானவை. சத் துவம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்கள் இருப்பது போல் ஒருவனை பிராமணன், க்ஷத்திரி யன், வைசியன், சூத்திரன் என்று குறிப்பிடும் குணங்கள் இருக்கின்றன. எனவே, ஒருவன் ஒரு சாதியிலிருந்து மற்றொரு சாதிக்கு மாறுதல் முற்றி லும் சாத்தியமாகும்; அது இயற்கையுமாகும். இல் லாவிடில் விசுவாமித்திரர் பிராமணராகவும், பரக ராமர் க்ஷத்திரியராகவும் எவ்வாறு ஆகியிருக்க முடியும்?
சாதி நல்லது: உரிமைதான் கெட்டது
சாதி என்பது நல்ல ஏற்பாடே… சமூக வாழ்க் கையை ஒழுங்குபடுத்துவதற்கு அது ஒன்றே இயற் கை வழி. எந்த சமூகத்திலும் மனிதர்கள் தனித் தனிக் கூட்டமாகச் சேர்ந்தேயாகவேண்டும். இந்த இயற்கை நியதியை மாற்ற முடியாது. நீங் கள் எங்கே போனாலும் சாதி இருப்பதைக் காண லாம். |
சாதி அடியோடு போகவேண்டியதில்லை. அதை அடிக்கடி சீர்திருத்தி அமைத்தலே அவசியமாகும். அந்தப் பழைய ஏற்பாட்டில் இரு நூறாயிரம் புதிய ஏற்பாடுகளை அமைப்பதற்கு வேண்டிய ஜீவசக்தி இருக்கிறது. சாதியை அடியோடு ஒழிக்க விரும்பு தல் அறிவீனமாகும்.
நம்மை ஒரு தனிச்சமூகமாகக் காப்பாற்றுவ தற்கு இந்த ஏற்பாடுகள் அவசியமாயிருந்திருக் கின்றன. தற்காப்புக்கு இந்த அவசியம் இல்லாமற் போகும்போது அவை இயற்கை மரணமடையும்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சாதி ஏற்பாட்டைக் காட்டிலும் இந்திய சாதி ஏற் பாடு சிறந்ததாகும். அது முற்றிலும் நல்லது என்று நான் சொல்லவில்லை. சாதி இல்லாவிட்டால் இப் போது உங்கள் கதி என்னவாயிருக்கும்? உங்கள் கல்வியும், பிறவும் என்ன கதி அடைந்திருக்கும்?
தனி வகுப்புகளாகப் பிரிந்தமைதல் சமூகத்தின் இயற்கை. விசேஷ உரிமைகளே தொலை தல் வேண் டும். சாதி என்பது ஓர் இயற்கை நியதி. சமூக வாழ்வில் நான் ஒரு கடமையைச் செய்கிறேன்; நீ மற்றொரு கடமையைச் செய்கிறாய். நீ நாட்டைஆள்கிறாய்; நான் பழைய செருப்புத் தைக்கிறேன். இதனாலேயே நீ என்னைவிடப் பெரியவனாவதெங்ங னம்? நான் நாடாள முடியாதெனில் நீ செருப்புத் தைக்க முடியுமா? நான் செருப்புத் தைப்பதில் கெட்டிக்காரன்; நீ வேதம் ஓதுவதில் சமர்த்தன்; அதனால் நீ என் தலை மீதேறி மிதிக்க வேண்டு மென்பதென்ன?
ஆண்டவன் மக்கட் குலத்து அளித்த மிகச் சிறந்த சமூக ஸ்தாபனங்களில் சாதி ஏற்பாடு ஒன் றென்பதாக நாங்கள் நம்புகிறோம். விலக்க முடியாத பல குறைபாடுகளும், அன்னிய நாட்டாரின் கொடு மைகளும் எல்லாவற்றிற்கும் மேலாக பிராமணர் என்னும் பெயருக்குத் தகுதியற்ற பிராமணர் பல ரின் மகத்தான அஞ்ஞானமும் கர்வமும், அவ்வுயரிய ஸ்தாபனமானது உரிய பயனளியா வண்ணம் செய்திருக்கின்றன. அங்ஙனமிருப்பினும், அந்த ஸ்தா பனத்தினால் பாரத நாட்டுக்கு ஆச்சரியகரமான நன் மைகள் விளைந்திருக்கின்றனவென்றும், இனியும் இந்திய சமூகத்தை அதன் இலட்சியத்துக்குக் கொண்டு சேர்க்கப் போவது அந்த ஸ்தாபனமே யென்றும் நாங்கள் நம்புகிறோம்.
தற்கால சாதி வேற்றுமையானது இந்தியாவின் முன்னேற்றத்துக்கு ஒரு தடைகல்லாகும். அது வாழ் வைக் குறுக்குகின்றது; கட்டுப்படுத்துகின்றது; பிரி வினை செய்கின்றது. அறிவு வெள்ளத்தின் முன்பாக அது விழுந்து மாயும்.
தற்காலப் போட்டியின் காரணமாக, சாதி எவ் வளவு விரைவில் மறைந்து வருகிறதென்று பாருங் கள். இப்போது அதைக் கொல்ல மதம் எதுவும் தேவையில்லை. வடஇந்தியாவில் கடைக்கார பிரா மணனும், செருப்புத் தைக்கும் பிராமணனும், சாராயம் காய்ச்சும் பிராமணனும் சர்வ சாதாரண் மாயிருக்கிறார்கள், இந்நிலைமைக்குக் காரணம் என்ன? வாழ்க்கைப் போட்டியேயாகும்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், எவனும் தன் ஜீவனோபாயத்துக்காக எந்தத் தொழிலும் செய்யலாம். தடை எதுவும் கிடையாது. எனவே வாழ்க்கைப் போட்டி பலமாகி விட்டது. இதன் பயனாக ஆயிரக்கணக்கானவர்கள் அடியில் கிடந்து உழலாமல், தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி மேனிலைக்கு வந்திருக்கிறார்கள்.
தனி உரிமைகளும், விசேஷ பாத்தியங்களும் கோரும் காலம் என்றென்றைக்கும் இத்தேசத்தி லிருந்து மலையேறிவிட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியினால் விளைந்துள்ள பெரு நன்மை களில் இது ஒன்றாகும்.
சாதிப் பிரச்சனையைத் தீர்க்கும் உபாயம்
சாதிச்சண்டை போடுவதில் பயனில்லை. அத னால் நன்மை என்ன? அச்சண்டை நம்மை இன்னும் அதிகமாகப் பிரிக்கும்; இன்னும் அதிகமாக பலவீனப் படுத்தும்; இன்னும் அதிகமாகத் தாழ்த்தும்.
சாதிப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு வழி மேலே யுள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; கீழேயுள்ளவர் களை மேலுள்ளவர்களின் நிலைக்கு உயர்த்துவதே யாகும். |
நமது இலட்சியத்தின் மேல்படியில் பிராமணன், கீழ்ப்படியில் சண்டாளன். சண்டாளனை பிராமண னுடைய நிலைக்கு உயர்த்துவதே நமது வேலை .
உயர் வகுப்பாரின் கடமை தங்களுடைய விசேஷ உரிமைகளைத் தாங்களே தியாகம் செய்வ தாகும். இது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவுக்கு நன்மை. தாமதம் ஆக ஆக அவை அதிகமாய்க் கெட்டுக் கொடிய மரணம் அடைகின் றன.
தான் பிராமணன் என்பதாக உரிமை பாராட்டிக்கொள்ளும் ஒவ்வொருவனும் அவ்வுரிமை யை இரண்டு வழிகளில் நிரூபிக்க வேண்டும். முத லாவது தன் பாரமார்த்திக மேன்மையை விளங்கச் செய்தல்; இரண்டாவது மற்றவர்களைத் தன் நிலைக்கு உயர்த்தல். ஆனால் தற்போது அவர்களில் பலர் பொய்யான பிறவிக் கர்வத்தையே பேணி வருவ தாகக் காணப்படுகிறது. பிராமணர்களே! எச்சரிக் கை! இது சாவின் அறிகுறியாகும். விழித்தெழுங் கள். உங்களைச் சுற்றியுள்ள பிராமணரல்லா தாரை உயர்த்துவதின் மூலம் உங்களுடைய மனிதத் தன் மையையும், பிரம்மண்யத்தையும் நிரூபியுங்கள். ஆனால் இதை எஜமானன் என்ற இறுமாப்புடன், குருட்டு நம்பிக்கை கலந்த கர்வப்புரையுடன் செய்ய வேண்டாம். ஊழியன் என்ற தாழ்மை உள்ளத் துடன் செய்யுங்கள்.
பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வதா வது: ‘ ‘ உங்களுக்குத் தெரிந்திருப்பதைப் பிறருக் குக் கற்பியுங்கள். பல நூற்றாண்டு காலமாக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் ஞானச் செல்வத்தை எல் லோருக்கும் அளியுங்கள். இவ்வாறு இந்திய ஜாதி யை உயர்த்தப் பெருமுயற்சி செய்யுங்கள்” என் பதே. உண்மைப் பிரம்மண்யம் எதுவென்பதை நினைவு கூர்ந்திருத்தல் பிராமணர்களின் கடமையா கும். பிராமணனிடம் ‘தர்ம பொக்கிஷம்’ இருப்ப தினாலேயே அவனுக்கு இவ்வளவு சிறப்புகளும், விசேஷ உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று மனு சொல்கிறார். பிராமணன் அப்பொக்கிஷத்தைத் திறந்து அதிலுள்ள செல்வங்களை உலகிற்கெல்லாம் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
பாம்பு தான் கடித்த மனிதன் உடலிலிருந்து தன் விஷத்தைத் திரும்ப உறிஞ்சிவிட்டால் அம் மனிதன் பிழைத்துக் கொள்வானென்று வங்காளத் தில் ஒரு குருட்டு நம்பிக்கை உண்டு. அவ்வாறே பிராமணன் தன்னால் விளைந்த தீமையைத் தானே நிவர்த்தி செய்யவேண்டும்.
இந்தியாவிலுள்ள மற்றச் சமூகங்களின் கதி மோக்ஷத்திற்காக உழைப்பது பிராமணனின் கடமையாகும்.
பிராமணரல்லாதாருக்கெல்லாம் நான் கூறு வதாவது: ”பொறுங்கள்; அவசரப்பட வேண்டாம். பிராமணனுடன் சண்டையிட எங்கே சந்தர்ப்ப மென்று காத்திராதீர்கள். நீங்கள் கஷ்டப்படுவத தற்குக் காரணம் உங்கள் தவறேயாகும். பாரா மார் திகத் துறையையும், சமஸ்கிருதக் கல்வியையும் அலட்சியம் செய்யும்படி உங்களுக்கு யார் சொன் னார்கள்? இவ்வளவு காலம் என்ன செய்துகொண் டிருந்தீர்கள்? இத்தனை நாள் அசட்டையாயிருந்து விட்டு, இப்போது மற்றவர்கள் உங்களை விட அதிக மூளையும், ஊக்கமும், சாமார்த்தியமும் உள்ள வார் களாயிருப்பது குறித்து எரிச்சலடைவதில் யாது பயன்? பயனற்ற விவாதங்களிலும், பத்திரிகைச் சண்டைகளிலும் உங்கள் சொந்த வீடுகளில் வீணான போர் நடத்திப் பாவந்தேடிக் கொள்வதற்குப் பதிலாக பிராமணன் பெற்றிருக்கும் அறிவுச் செல் வத்தையடைவதில் உங்கள் எல்லா சக்திகளையும் பயன்படுத்துங்கள். உபாயம் அதுவே யாகும்.”
தாழ்ந்த சாதியர்களுக் கெல்லாம் நான் சொல் வதாவது: ‘ உங்களுக்கு ஒரே வழி சம்ஸ்கிருதம் படித்தலேயாகும். உயர் சாதியார்களிடத்து எரிந்து விழுதலும், அவர்களுடன் சண்டை போடுதலும் பயனளியா. அவ்வழியினால் யாருக்கும் நன்மையில்லை, அதனால் துரதிர்ஷடவசமாக ஏற்கனவே பிரிவினை அதிகமாயுள்ள நமது சமூகத்தில் நாளுக்கு நாள் அதிக வேற்றுமையே ஏற்படும். உயர் சாதிகளின் வலிமையெல்லாம் அவர்களுடைய கல்வியும், பயிற் சியுமேயாம். நீங்களும் அவற்றைக் கைக்கொள்வதொன்றே சாதி சமத்வத்தை ஏற்படுத்தும் வழியாகும்.”
நீங்கள் ஏன் சமஸ்கிருத பண்டிதர்கள் ஆகக் கூடாது? இந்தியாவிலுள்ள எல்லா சாதிகளுக்கும் சம்ஸ்கிருதக் கல்வியளிப்பதற்காக நீங்கள் ஏன் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யலாகாது?
இவைகளை நீங்கள் செய்து முடிக்கும்போது பிராமணனுடன் சமமாகிறீர்கள். இந்தியாவில் செல் வாக்குப் பெறும் இரகசியம் அதுவேயாகும். இந் தியாவில் சம்ஸ்கிருதமும் மரியாதையும் பிரிக்க முடி யாதவையாயிருக்கின்றன. நீங்கள் சம்ஸ்கிருதக் கல்வி பெற்றவுடன் உங்களுக்கு விரோதமாய் யாரும் எதுவும் சொல்லத் துணியார்கள்.