12. பெண் மக்கள் முன்னேற்றம்
பல நூற்றாண்டுகளாகட்ட பலவகைச் சந்தர்ப் பங்களினால் நமது பெண்களுக்குப் பாதுகாப்பு அவசி ய! மாயிருந்து வந்திருக்கிறது. நமது பழக்க வழக்கங் களுக்கு உண்மைக் காரணம் இதுவேயன்றி, ஸ்திரீ கள் தாழ்ந்தவர்கள் என்னும் கொள்கையன்று.
நமது பெண்கள் திக்கற்றவர்களாகவும், பிறரை நம்பி வாழ்பவர்களாகவும் நீண்ட காலமாகப் பயிற்சி செய்யப்பட்டு வந்திருக்கின்றனர். இதன் பயனாக, மிகச் சிறு அபாயம் அல்லது துன்பம் நேர்ந்துவிட்டாலும் அவர்கள் கண்ணீர் பெருக்கு வதற்கே தகுந்தவர்களாகிவிட்டனர்.
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந் தியாவில் வழங்கும் முறைகள் மற்ற எந்த நாட்டா ரின் முறைகளிலும் பல அம்சங்களில் உயர்ந்தவை என்று நான் திட்டமாகக் கூறுவேன்.
இந்தப் புண்ணிய பாரத பூமியில், சீதையும் சாவித்ரியும் வாழ்ந்த இந்நாட்டில், இன்னமும் பெண்மைக்கு இலக்கியமானவர்களைக் காணலாம். அவ்வளவு தூய நடக்கையும், தொண்டில் விருப்ப மும், அன்பும், தயாளமும், திருப்தியும், பக்தியும் ஒருங்கே வாய்ந்த பெண்களை உலகில் வேறெந்த நாட்டிலும் நான் காண்பதற்கில்லை.
சீதைக்குப் பிறப்பளித்த ஒரு ஜாதியார் பெண் குலத்தினிடம் வைத்திருக்கும் மரியாதை உலகில் ஒப்புவமை யற்றதாயிருக்குமென நான் அறிவேன். சீதை அவர்கள் கனவில் கண்ட பெண்ணரசியா யிருப்பினும் இது பொருந்தும்.
பண்டை நாளில் ஆரண்யங்களில் நடைபெற்ற நமது சர்வ கலாசாலைகளில்—–குரு குலங்களில் சிறு வர் சிறுமிகளுக்கு அளிக்கப்பட்ட சமத்வத்தினும் பூரண சமத்வம் வேறுண்டா ? நம்து சமஸ்கிருத நாடகங்களைப் படியுங்கள். சகுந்தலையின் சரிதத்தை படித்துவிட்டு, டென்னிஸன் இயற்றிய ‘ இளவரசி’ என்னும் கவிதை நமக்குக் கற்பிக்கக்கூடியது ஏதேனு முண்டாவெனப் பாருங்கள்.
விதவைகளின் பிரச்னையைப் பற்றியும், பொது வாக ஸ்திரீகள் நிலையைப்பற்றியும் எனது கருத் தென்னவென்று அடிக்கடி கேட்கப்படுகிறது. நான் இதற்கு முடிவான பதிலாகச் சொல்வதென்னவெ னில்–இந்த அசட்டுக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நான் விதவையா? அல்லது ஸ்திரீ யா? பின்னர், என்னை ஏன் கேட்க வேண்டும்?
பெண் மக்கள் சம்பந்தமான பல முக்கிய பிரச்னைகள் உண்டென்பது உண்மையே. ஆனால் ‘கல்வி’ என்னும் மந்திரத்தினால் தீர்த்து வைக்க முடியாதது அவற்றில் எதுவுமில்லை.
ஸ்திரீகளின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு நீ யார்? ஒவ்வொரு விதவையையும், ஸ்திரீயையும் அடக்கி ஆள்வதற்கு நீ என்ன, அவர்களைப் படைத்த ஆண்டவனா? விலகி நில். அவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள்.
உங்கள் பெண்மக்களுக்குக் கல்வியளியுங்கள்; பின்னர் அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். தங் களுக்கு என்னென்னசீர்திருத்தங்கள் வேண்டுமென்று அவர்களே சொல்வார்கள். அவர்களைப் பொறுத்த விஷயங்களில் தீர்ப்புச் சொல்ல உங்களுக்கென்ன அதிகாரம்?
ஹிந்து பெண்மணிகளில் பெரும்பான்மையோ ரால் நினைக்கவும் முடியாத அளவு ஒவ்வோர் அமெரிக்கப் பெண்மணியும் கல்வி பயின்றிருக்கிறாள் . நமது பெண்களும் ஏன் அத்தகைய கல்வி பெறுதல் கூடாது? பெற்றேயாதல் வேண்டும்.
அமெரிக்காவில் ஆண்மக்கள் தங்கள் பெண் மக்களை மிக நன்றாக நடத்துகிறார்கள். எனவே அவர் கள் செல்வத்திலும் கல்வியிலும் சிறந்து, ஊக்கமு டைய சுதந்திர வாழ்வு நடத்துகிறார்கள். ஆனால் நாம் துன்பத்திலாழ்ந்து ந.ை- பிணங்கள் போல் அடிமை வாழ்வு வாழ்வதேன்? இதற்கு விடை சொல்ல வேண்டுவதில்லை.
பெண் கல்விக்கு ஆரம்பம் செய்வதெப்படி? கற்பு என்பது ஹிந்து மா தரின் பரம்பரைச் செல்வம் எனவே, கற்பு என்றால் என்னவென்று அவர்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள். முதலில், இந்த இலட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்துங் கள். இதனால் அவர்கள் சிறந்த ஒழுக்க வலிமை பெறுவார்கள். அவர்கள் இல்லறத்தை மேற்கொள் ளலாம்; அல்லது விரும்பின் கன்னிகைகளாகவே காலங்கழிக்கலாம். எங்ஙனமாயினும், அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், தங்கள் கற் பினின்று ஓரணுவேனும் வழுவுவதினும் உயிரையே விட்டுவிடவும் அஞ்சாத மனத்திண்மை பெறுவார்கள்
ஸ்திரீகள் தங்களுடைய பிரச்னைகளைத் தாங் களே தீர்த்துக் கொள்ளும்படியான நிலைமைக்கு அவர்களைக் கொண்டு வந்து விடவேண்டும்.
நமது பாரதத் தாயின் க்ஷேமத்திற்கு அவளுடைய புதல்வர்களில் சிலர் ஆத்மத் தூய்மையுள்ள பிரம்மசாரிகளாகவும் பிரம்மசாரிணிகளாகவும் வாழ்வு நடத்தல் அவசியமிருக்கிறது.
தற்காலத்தின் தேவைகளை முன்னிட்டு ஆராய்ந் தால் பெண்மக்களில் சிலரைத் துறவி இலட்சியங் களில் பற்றுண்டாகுமாறு பயிற்சி செய்தல் அவசிய மெனக் காண்கின்றது. அவர்கள் அநாதி காலமாகத் தங்களுடைய இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் பாதி விரதா தர்ம பலத்தினால் ஊக்கமடைந்து வாணாள் முழுதும் கன்னிகைகளாகவே இருந்து தொண்டு செய்வதாக விரதங் கொள்ள வேண்டும்.
நவீன பௌதிக சாஸ்திரங்கள் அவர்களுக்குக் கற்பிக்கப் படவேண்டும். அவர்களுக்கும் மற்றவர் களுக்கும் பயன்படக் கூடிய வேறு விஷயங்களும் கற்பிக்கப்பட வேண்டும்.
தேச சரித்திரம், புராணங்கள், குடும்ப நிர் வாக முறைகள், உயர் கலைகள், சன்மார்க்க தத்து வங்கள் இவை எல்லாம் நவீன பௌதிக சாஸ் திரத்தின் துணைகொண்டு அவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும். அத்துடன் அறநெறியிலும் பாரமார்த் திக வாழ்க்கையிலும் பயிற்சியளிக்க வேண்டும். உரிய காலத்தில் அவர்கள் அன்னை மார்களுக்கு இலக்கியங்களாய் விளங்கும் வண்ணம் பயிற்சி செய்வித்தல் வேண்டும்.
பெண் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பிக்கும் கடமை, படிப்புள்ள கைம்பெண்களுக்கும் பிரம்ம சாரிகளுக்குமே எவ்வாறாயினும் உரிய தாகும். இந்த நாட்டில் பெண் பள்ளிக்கூடங்களில் ஆண்மக்களின் தொடர்பை விலக்குதல் நலம்.
சமயம் கலைகள் பௌதிக சாஸ்திரம், வீட்டு வேலை, சமையல், தையல், சுகாதாரம் இவற்றில் எல்லாம் முக்கியமான அம்சங்கள் நமது ஸ்திரீ களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். நவீனங்கள், கதைகள் முதலியவை அவர்கள் படித்தல் நன்மை யன்று. ஆனால் பூஜாவிதிகள் மட்டும் சொல்லிக் கொடுத்தலும் போதாது. அவர்களுக்களிக்கப்படும் கல்வி எல்லா விஷயங்களிலும் கண் திறப்பதாய் இருக்க வேண்டும். நற்குணங்களுக்கு இலக்கியங்க ளான பெண்மணிகளின் சரிதங்களை அடிக்கடி. பெண் குழந்தைகளுக்குச் சொல்லி, சுய நலத்தியாக வாழ்க் கையில் அவர்களுக்குப் பற்றுண்டாகும்படி செய்ய வேண்டும். சீதை, சாவித்ரி, தமயந்தி, லீலாவதி, மீராபாய் முதலிய உத்தமிகளின் உதாரணங்கள் எப்போதும் அவர்கள் உள்ளத்தில் குடிகொண்டி ருக்கச் செய்தல் அவசியம், அக்கற்பரசிகளை இலக் கியமாகக் கொண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கை யை அமைத்துக் கொள்ளுமாறு செய்தல் நமது கடமையாகும்.
இந்நாட்டின் ஆண் மக்களுக்கு நான் சொல்வ தையே பெண்மணிகளுக்கும் கூறுவேன். இந்தியா விலும், இந்திய தர்மத்திலும் நம்பிக்கை வையுங் கள். பலசாலிகளாயும், வருங்காலத்தில் நம்பிக்கை உடையவர்களாயு மிருங்கள். உங்களுடைய பழைய நாகரிகத்தைக் குறித்து வெட்கப்பட வேண்டாம். ஹிந்துக்கள் பிறரிடமிருந்து பெற வேண்டியது கொஞ்சம் உண்டாயினும், உலகில் வேறெந்த நாட் டாரையும் விட அவர்களிடம் கொடுப்பதற்கதிக மிருக்கிற தென்பதை நினைவில் வையுங்கள்.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் முப்பதாண்டு பிரம்மசரியம் காத்த பின்னரே அவர்களுக்குக் கலி யாணம் செய்து வைக்க வேண்டும். அது போன்ற பெண்களும் பிரம்மசரியங்காத்தல் அவசியம். அக் காலத்தில் அவர்களுக்குப் பெற்றோர்களால் கல்வி யளிக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் பெண்கள் சீதையின் அடிச்சுவடு களைப் பின்பற்றியே முன்னேற வேண்டும். வேறு வழி கிடையாது.
மற்றவைகளுடன், அவர்கள் வீரமும் வலிமை யும் கூடப்பெற வேண்டும். இந்நாளில் அவர்கள் தற்காப்பு முறைகள் தெரிந்து கொள்ளுதலும் அவசி யமாகிவிட்டது.
நமது ஸ்திரீகளைத் தற்கால நாகரிகத்தில் பழக் குவதற்குச் செய்யப்படும் எந்த முயற்சியாயினும், அது சீதையின் இலட்சியத்திலிருந்து அவர்களை அகற்றிக்கொண்டு போவதாயிருந்தால், உடனே தோல்வியடைதல் நிச்சயம். இதைப் பிரதிதினமும் நாம் பார்க்கிறோம்.
உங்கள் பெண் மக்களின் நிலைமையை உங்க ளால் உயர்த்த முடியுமா? முடியுமென்றால், வருங் காலத்தில் நீங்கள் க்ஷேமமடைவீர்களென்று நம்பு தற்கிடமுண்டு. இன்றேல் இப்போதுள்ள கீழ் நிலை யிலேயே இருக்க வேண்டியது தான்.
உண்மையான சக்தி உபாசகன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? இவ்வுலகத்தில் ஆண்ட வன் சர்வ வியாபியான சக்தியாயுள்ளான் என்பதையறிந்து, பெண் மக்களிடத்தே அந்த சக்தியின் வெளித் தோற்றத்தைக் காண்பவனேயாவான்.