10. கல்வி —எல்லாச் சமூகத் தீமைகளுக்கும் அருமருந்து
தேசத்தின் பாரமார்த்திகக் கல்வியும் லௌகிகக் கல்வியும் நம் வசத்தில் இருக்கவேண்டும். உங்களுக்கு விளங்குகிறதா? அதைப்பற்றியே நீங்கள் கனவு காணவேண்டும். அதைப்பற்றியே பேசவும், நினைக்கவும் வேண்டும். அதைச் செயலில் நடத்தி வைக்கவும் வேண்டும். அதுவரையில் இந்த ஜாதிக்குக் கதிமோக்ஷம் இல்லை.
என் வாழ்க்கையின் பேரவா இது தான்; ஒவ் வொருவனுடைய வீட்டு வாசலுக்கும் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு போகக் கூடிய ஓர் இயக் கத்தை ஏற்படுத்தி அதை நடத்தி வைத்தல்; பின் னர் ஜனங்களைத் தங்கள் விதியைத் தாங்களே நிர் ணயித்துக் கொள்ளும்படி விட்டுவிடுதல். வாழ்க்கை யின் மிக முக்கியமான பிரச்னைகளைப்பற்றி நமது மூதாதைகள் கொண்டிருந்த கருத்துக்களையும், பிற நாட்டாரின் கொள்கைகளையும் அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தற்போது அயல் நாட்டார் என்ன செய்து வருகிறார்களென்பதையும் அவர்கள் பார்க் கட்டும். பின்னர் தங்களுக்குத் தாங்களே முடிவு செய்து கொள்ளட்டும். இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதே நமது வேலை; இயற்கைச் சட்டங்களின்படி அவைதாமாக மாறுதலடையும்.
பெண்களைப் பொறுத்த வரையில் மிக முக்கிய மான பிரச்னைகள் பல உண்டு என்பதில் சநதேக மில்லை. ஆனால் ”கல்வி” என்னும் மந்திரத்தினால் தீர்த்துவைக்க முடியாதது அவற்றில் எதுவு
தற்போது நீங்கள் பெற்று வரும் கலவி நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அதிலு ஒரு பெரிய பிரதிகூலத்தினால் அந்த நல்ல * ளெல்லாம் அமிழ்த்தப்பட்டு விடுகின்றன. முக்கி யமாக, அது மனிதத்தன்மை அளிக்கும் கலவியன்று; முழுதும் எதிர்மறைக் கல்வி இது கெட்டது, அது கெட்டது என்றே எப்பொழுதும் கூறும் எதிர் மறை யான பயிற்சி மரணத்தை விடக் கொடியதாகும். இப்பொழுது நம் நாட்டில், குழந்தை பள்ளிக்கூடம் சென்றதும் முதன் முதலில் கற்றுக் கொளவதென்ன! தன் தந்தை மூடன் என்பதேயாகும். இரண்டாவ தாக, தன் பாட்டன் பெரிய பைத்தியக்காரனென் றும், மூன்றாவதாகத் தன் உபாத்தியாயாகளெல்லா ரும் ஆஷாடபூதிகள் என்றும், நான்காவதாக, வேத சாஸ்திரங்கள் எல்லாம் வெறும் பொய்க் களஞ் சியங்கள் என்றும் அவன் கற்றுக்கொள்கிறான். அவ னுக்குப் பதினாறு வயதாகும்போது, உயிரற்ற, எலும்பற்ற, எதிர்மறைப் பிண்டமாக இருக்கிறான். எல்லாம் அவனுக்குக் கெடுதலாகவே காணப்படு கின்றன.
அப்பப்பா! பி.ஏ. பட்டத்திற்காக எனன தட புடல்? என்ன ஆர்ப்பாட்டம்? சில நாளைக்குள் அவ் வளவும் பறந்து விடுகின்றன. கடைசியில் அவர்கள் கற்றுக் கொள்வது தான் என்ன? நம்முடைய சமயம் பழக்க வழக்கங்கள் எல்லாம் கெட்டவை என்றும், மேனாட்டாருடையனவெல்லாம் நல்லவையென்றும் கற்றுக்கொள்கிறார்கள்; அவ்வளவுதான்! இக்கல்வியினால் அவர்கள் தங்கள் பசிப் பிணியைக்கூட நீக்கிக் கொள்ள முடிவதில்லை. இத்தகைய உயர் தரக் கல்வி இருந்தாலென்ன? போனாலென்ன? இதை விட ஜனங்கள் சிறிதளவு தொழிற்கல்வி பெறக்கூடுமா னால் நன்மையுண்டு. ” உத்தியோகம், உத்தியோகம்’ என்று அடித்துக்கொண்டு திரிவதற்குப் பதிலாக அவர்கள் ஏதேனும் தொழில் செய்து ஜீவனோபாயம் தேடிக்கொள்வார்கள்.
கழுதையை நன்கு புடைத்தால் அது குதிரை யாகிவிடுமென்று யாரோ சொல்லக் கேட்டு அவ் விதமே ஒருவன் செய்தான் என்றொரு கதை உண்டு. இந்தகைய முறையிலேயே நமது சிறுவர்களுக்குக் கல்வியளிக்கப்பட்டு வருகிறது. இம்முறை தொலைய வேண்டும்.
மனிதனுக்குள் ஏற்கெனவே இருக்கும் பூரணத் துவத்தை விகசிக்கச் செய்வதே கல்வியாகும்.
கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணித்து விடுவதன்று. அவ்விதம் திணிக்கப்படும் விஷயங்கள் அங்கே வாணாள் முழு தும் செரியாமல் தொந்தரவளித்துக் கொண்டிருக் கின்றன. அதனால் என்ன பயன்? கற்கும் விஷயங்கள் நன்கு ஜீரணமாகவேண்டும். அவை உயிர் ஊட்டுவன வாய், மனிதத்தன்மை தருவனவாய், ஒழுக்கமமைப் பனவாயிருக்க வேண்டும். நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துக்களை ஜீரணித்துக் கொண்டு அவற்றை உங் கள் வாழ்க்கையிலும், நடத்தையிலும் ஊடுருவி நிற் கும்படி செய்வீர்களானால், ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விடப் பெரிய கல்விமான்களாவீர்கள்,
உயர்தரக் கல்வியின் உபயோகம் யாது? வாழ்க் கையின் பிரச்னைகளைத் தீர்த்துவைத்தல் எப்படி எனக் கண்டு பிடிப்பதே. நவநாகரிக உலகின் மிக சிறந்த அறிஞர்களின் கவனத்தை யெல்லாம் தற் போது கவர்ந்திருப்பது இவ்விஷயமேயாகும். ஆனால் நம் தேசத்தில் அதற்குரிய வழி ஆயிரம் ஆயிர மாண்டுகளுக்கு முன்னாலேயே கண்டு பிடிக்கப்பட்டு விட்டது.
ஒழுக்கமளிப்பது, மனோவலிமை தருவது, புத் தியை விசாலிக்கச் செய்வது, ஒருவனைத் தன் வலி மைகொண்டு நிற்கச் செய்வது ஆகிய இத்தகைய கல்வி நமக்கு வேண்டும்.
மனிதத் தன்மை அளிப்பதே கல்விப்பயிற்சி யின் இலட்சியமாயிருத்தல் வேண்டும். அதற்குப் பதிலாக நாம் எப்போதும் வெளிப்புறத்துக்கு மெருகு கொடுப்பதிலேயே ஈடுபட்டிருக்கிறோம். உள் ளே ஒன்று மில்லா திருக்கையில் வெளிப்புறத்துக்கு மெருகிட்டுக் கொண்டிருப்பதால் யாது பயன்?
பண்டைக் காலத்துக் குருகுலங்களைப் போன்ற கல்வி ஸ்தாபனங்கள் தேவை. அவற்றில் மேனாட் டுப் பௌதிக சாஸ்திரத்துடன் வேதாந்தமும் கற் பிக்கப்பட வேண்டும். பிரம்மசரியம், சிரத்தை , தன் னம்பிக்கை என்னும் அடிப்படைகளின் மீது கல்வி அளிக்கப்பட வேண்டும்.
ஆசிரியன் தான் கற்பிப்பதாக எண்ணுவதினா லேயே எல்லாவற்றையும் கெடுத்துவிடுகிறான். சகல ஞானமும் மனிதனுக்குள் இருக்கிறதென்று வேதாந் தம் சொல்கிறது. அந்த ஞானம் ஒரு சிறுவனுக் குள்ளும் இருக்கிறது. அதை எழுப்புதலே தேவை. அதுவே ஆசிரியனின் வேலை. சிறுவர்கள் தங்கள் சொந்த அறிவை உபயோகப்படுத்தவும், தங்கள் கால், கை, கண், செவி இவற்றை முறையாகப் பயன் படுத்தவும் தெரிந்துகொள்ளும் அளவில் நாம் அவர்களுக்கு உதவி செய்தால் போதும். மற்ற எல்லாம் தாமே எளிதாகிவிடும்.
உங்களால் ஒரு செடியை வளர்க்க முடியுமா? அது போன்றே ஒரு குழந்தைக்கு நீங்கள் எதுவும் கற்பித்தல் இயலாத காரியம். செடி தானே வளர உதவி மட்டுமே நீங்கள் செய்ய முடியும். கல்வி விஷயமும் இவ்வாறு தான். கல்வி என்பது உள்ளி ருந்து விகசிப்பது. அது தன் இயற்கையினால் வளர்ச் சியுறுகிறது. அதன் வளர்ச்சிக்குத் தடையுள்ளவை களை நீக்குவது மட்டுமே நீங்கள் செய்யக் கூடிய தாகும்.
நமது நாட்டின் கல்வி முழுவதும், பாரமார்த்திகக் கல்வியாயினும் சரி, லௌகிகக் கல்வியா யினும் சரி, நம்கையிலேயே இருத்தல் வேண்டும். கூடியவரையில் தேசீயவழிகளில் தேசீய முறைகளி லேயே கல்வி யளித்தல் வேண்டும்.
நமக்கு வேண்டுவதென்னவென நீங்கள் அறி வீர்கள், அன்னிய நாட்டு ஆதிக்கமின்றி நமது சொந்த ஞானத் துறைகள் எல்லாவற்றையும் நாம் ஆராய்ச்சி செய்தல் வேண்டும். அத்துடன் ஆங்கில பாஷையையும், மேனாட்டு பௌதிக சாஸ்திரத்தை யும் கற்கவேண்டும். இவையல்லாமல், தொழிற் கல் வியும், தொழில் வளர்ச்சிக்குரிய சகல அறிவும் நமக்குத் தேவை. இதன் மூலம், படித்தவர்கள் உத்தியோகம் தேடி அலைவதற்குப் பதிலாக, தங் களுக்கு வேண்டிய அளவு சம்பாதித்துக் கொள்ளவும், கஷ்ட காலத்துக்குச் சிறிது பொருள் சேர்த்து வைக்கவும் சாத்தியமாதல் வேண்டும்.
சுடர் விட்டெரியும் தீயை யொத்த தூய ஒழுக் கமுடைய ஆசிரியனோடு ஒருவன் தன் குழந்தைப் பிராயத்திலிருந்து வசித்தல் வேண்டும். உயரிய கல் விப் பயிற்சிக்கு உயிருள்ள ஓர் உதாரணமாக அவ்வா சிரியன் இருத்தல் வேண்டும்.
பொய் சொல்லுதல் பாவம் என்று படிப்பதால் மட்டும், பயன் என்ன? ஒவ்வொரு சிறுவனும் பூரண பிரம்மசரியத்தை அனுஷ்டிக்கு மாறு பயிற்சி செய் யப்பட வேண்டும். பக்தியும் சிரத்தையும் அப்போது தான் உண்டாகும். பக்தி சிரத்தையில்லாத ஒருவன் பொய் கூறாதிருப்பது எங்ஙனம்?
சிறுவர்களுக்குத் தகுந்த தான ஒரு புத்தகம்கூட நம் நாட்டில் இல்லை. இராமாயணம், மகாபாரதம், உபநிஷதங்கள் இவற்றிலிருந்து சிறு கதைகளடங்கிய சில புத்தகங்களைத் தாய் மொழியிலும், ஆங்கிலத் திலும் நாம் தயாரிக்க வேண்டும், அவை மிக எளிய நடையில் எழுதப்படவேண்டும்.