9. சமூக சீர்திருத்த முறை
நீங்கள் உண்மையான சீர்திருத்தக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலா வது உணர்ச்சி, உங்கள் சகோதரர்களுக்காக உண் மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா? இவ்வுலகில் இவ்வளவு துயரமும், அறியாமையும், மூட நம்பிக் கையும் இருந்து வருவது கண்டு உண்மையிலேயே மனம் புண்ணாகிறீர்களா? இந்நாட்டில் வாழும் மனி தர்கள் எல்லாம் உங்கள் சொந்தக் சகோதரர்களே என உணர்கிறீர்களா? இவ்வுணர்ச்சி உங்கள் உடம்பு முழுவதிலும் ஊறிப் போயிருக்கிறதா? அது உங்கள் குருதியில் கலந்து ஓடுகிறதா? உங்கள் நரம்புகளில் அது துடிக்கிறதா? உங்கள் உடம்பின் ஒவ்வொரு தசை நாரிலும் அது ஊடுருவி நிற்கிறதா? அவ்வ நு தாப உணர்ச்சி உங்களுக்குள்ளே பொங்கித் ததும்பு கின்றதா? அங்ஙனமாயின் முதற்படி ஏறிவிட்டீர்கள். அடுத்தாற்போல் பரிகாரம் ஏதேனும் கண்டுபிடித் தீர்களா என்று சிந்திக்கவேண்டும். பழைய கொள் கைகள் மூடக் கொள்கைகளாயிருக்கலாம். ஆனால் அம் மூடக்கொள்கைத்திரளின் உள்ளே சத்தியமென் னும் தங்கக் கட்டிகள் புதைந்து கிடக்கின்றன. குப்பையைப் போக்கி விட்டுத் தங்கத்தை மட்டும் வைத்துக்கொள்ள நீங்கள் உபாயம் கண்டு பிடித்தி ருக்கிறீர்களா? மூன்றாவது இன்னும் ஒன்று அவ சியம். உங்கள் நோக்கம் என்ன? பொன்னாசை, புகழாசை, அதிகார ஆசை என்னும் இவை உங் களிடம் அறவே யில்லை யென்று நிச்சயமாய்ச் சொல்ல முடியுமா?
ஆயிரக்கணக்கான மனிதர்களால் மேடைப் பிரசங்கங்கள் செய்யப்பட்டு விட்டன. ஹிந்து சமூகத் தின் மீதும், ஹிந்து நாகரிகத்தின் மீதும் கணக்கில் லாத கண்டனங்களைச் சொரிந்தாகிவிட்டது. எனி னும் காரியத்தில் நற்பயன் எதுவும் விளையக்காணோம். இதன் காரணமென்ன? காரணங் கண்டு பிடிக்க அதிக சிரமப்படவேண்டியதில்லை. கண்டனத்தில் தான் காரணம் இருக்கிறது. நன்மை புரிவதற்கு வழி கண்டனம் செய்தல் அன்று.
நமது நவீன சீர்திருத்த இயக்கங்கள் எல்லாம் பெரும்பாலும் மேனாட்டு உபாயங்களையும் மேனாட்டு வேலை முறைகளையும் யோசனையின்றிப் பின்பற்று வன வாயிருப்பது குறித்து வருந்துகிறேன். இவை நிச்சயமாய் இந்தியாவுக்குப் பயன் படமாட்டா.
இந்தியாவில் சீர்திருத்தக்காரர்கள் எல்லோரும் ஒரு பெரிய தவறு செய்தார்கள். புரோகிதக் கொடுமை முதலிய பயங்கரங்கள் எல்லாவற்றிற் கும் அவர்கள் மதத்தையே காரணமாகக் கொண்டு அழிக்க முடியாததான சமய மென்னும் கட்டிடத் தை இடிக்க முற்பட்டார்கள். விளைந்த தென்ன? தோல்வியே!
எனக்குச் சீர்திருத்தத்தில் நம்பிக்கையில்லை, வளர்ச்சியிலேயே நம்பிக்கை உண்டு. நானே கட வுள் ஸ்தானத்தில் இருப்பதாய் எண்ணிக்கொண்டு, ”இவ்வழிதான் போக வேண்டும்; அவ்வழி நோக்கக் கூடாது” என்று சமூகத்துக்குக் கட்டளைகள் பிறப் பிக்க எனக்குத் துணிவில்லை.
என்னுடைய இலட்சியம், தேசீய வழிகளில் வளர்ச்சி விஸ்தரிப்பு, அபிவிருத்தி என்னும் இவை யாகும்.
மனிதன் எந்நிலையிலுள்ளானோ அந்நிலையில் அவனை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து மேலே தூக்கி விடுங்கள். நீங்களும் நானும் என்ன செய்ய முடி யும்? ஒரு குழந்தைக்கேனும் அது அறியாத ஒன்றை நீங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமா? ஒரு காலும் முடியாது. குழந்தை தனக்குத்தானே பாடங் கற்றுக் கொள்கிறது. அதற்குச் சந்தர்ப்பங்களை ஏற்படுத் திக் கொடுத்தலும், வழியிலுள்ள தடைகளை நீக்குத லுமே உங்கள் கடமை. செடி வளர்கிறது. அதை வளரச் செய்பவர்கள் நீங்களா? அதைச் சுற்றி வேலி எடுத்து ஆடு மாடு மேயாமல் பார்த்துக் கொள்வதே உங்கள் கடமை. செடி தானே வளர்கிறது.
தேசீய வாழ்வுக்கு உணவு என்ன வேண்டுமோ – அதை அளியுங்கள். ஆனால் வளர்ச்சி அதனுடையதேயாகும். அதன் வளர்ச்சி குறித்து அதற்கு யாரும் கட்டளையிட முடியாது.
முற்றும் மூடநம்பிக்கை கொண்டதும், முழு அறிவீனமுள்ளதுமான ஸ்தாபனங்களைக் கூடக் கடுமொழியால் கண்டிக்க வேண்டாம். ஏனெனில் அவை முற்காலத்தில் ஏதோ ஒரு நன்மையையே செய்திருக்கவேண்டும்.
உலகில் வேறெந்த நாட்டிலுள்ள ஸ்தாபனங் களும், இந்நாட்டு அமைப்புகளை விட உயர்நோக்கங் கள் கொண்டவை அல்ல என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.
தற்போது முழுத் தீமைகளாகக் காணப்படும் வழக்கங்கள் கூட முற்காலத்தில் ஜீவ சக்தியளிப் பனவாயிருந்திருக்கின்றன. ஆதலின் அவற்றை நாம் நீக்க வேண்டுமானால் அவ்வழக்கங்களைச் சபித்துக் கொண்டு அம்முயற்சியில் இறங்க வேண்டாம். நமது ஜாதியின் பாதுகாப்புக்காகச் செய்திருக்கும் அரிய வேலைக்கு நன்றியறிதலுடன் அவற்றிற்கு ஆசி கூறிக்கொண்டே விலக்குவோமாக.
என் தேசத்தாரைக் கண்டிப்பதற்கு நான் ஒருப்படேன் அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், ”நீங்கள் செய்திருப்பது நன்று; ஆனால் இன்னும் அதிக நன்றாய்ச் செய்ய முயலுங்கள்” என்பதே.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மோக்ஷத் தைத்தானே தேடிக் கொள்ள வேண்டும். வேறு வழி கிடையாது. தேசங்களும் அப்படியே. தற்போ துள்ளவற்றை விடச் சிறந்த புதிய ஸ் தாபனங்கள் ஏற்படும் வரையில், பழைய ஸ்தாபனங்களைத் தகர்க்க முயலுதல் பெருவிபத்தாக முடியும். வளர்ச்சி எப் போதும் படிப்படியாகவே ஏற்படக்கூடும்.
இந்தியாவில், ஒரு சமூக சீர்திருத்தத்தைப் பர வச் செய்வதற்கு மார்க்கம், அப்புதிய ஏற்பாட் டால் பாரமார்த்திக வாழ்வு எந்த அளவில் மேன் மையுறும் என்று காட்டுவதே யாகும். அரசியலுக் கும் இது பொருந்தும். அதன் மூலம் தேசத்தின் ஆன்மஞானம் எந்த அளவில் வளர்ச்சியுறும் என்று காட்டியே அரசியல் பிரசாரம் செய்ய வேண்டும்.
சமூகச் சீர்திருத்தம் எனும் வீண் முயற்சியில் இறங்க வேண்டாம். பாரமார்த்திகச் சீர்திருத்தம் முதலில் ஏற்படாவிட்டால் வேறெந்தச் சீர்திருத்த மும் ஏற்படமுடியாது.
விஷயத்தின் மூலவேருக்கே நீங்கள் போக வேண்டும். அதுவே அடிப்படையான சீர்திருத்தமா கும். தீயை அடியில் வைத்து விடுங்கள். அது எரிந்து எரிந்து மேலெழும்பி வரட்டும்.
உங்கள் உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இத யத்தைத் திறந்து விடுங்கள். உங்களில் ஒவ்வொரு வரும், சுமை முழுதும் தம் தோள்களிலேயே சுமந் திருப்பதாய் எண்ணிக் கொண்டு உங்கள் நாட்டின் கதிமோக்ஷத்துக்காகவும் உலகத்தின் கதிமோக்ஷத் துக்காகவும் உழையுங்கள்.
நோயின் காரணங்களை வேருடன் களைந்து விட லே என் சிகிச்சை முறையாகும்; அவற்றை மூடி வைப்பதன்று.
நன்மையான சமூக மாறுதல்கள் எல்லாம் உள்ளே வேலை செய்யும் பாரமார்த்திக சக்திகளின் வெளித்தோற்றமே யாகும். இந்த சக்திகள் வலிமை பொருந்தியிருப்பின், சீராக அமையின், சமூகமும் அதற்கிணங்க ஒழுங்காக அமையும்.