8. பாரமார்த்திக அடிப்படை
நாம் கவனம் செலுத்தற்குரிய முதலாவது வேலை இதுவாகும்; நமது உபநிஷதங்களிலும் சாஸ் திரங்களிலும் புராணங்களிலும் உள்ள அதி ஆச்சரி யமான உண்மைகளை அந்நூல்களிலிருந்து வெளிக் கொண்டு வந்து நாடெங்கும் விஸ்தாரமாகப் பரப்புதல் வேண்டும்.
இந்தியாவில் அபிவிருத்தி எதுவும் ஏற்பட வேண்டுமானால் முதலில் சமய எழுச்சி உண்டாக வேண்டும். ஆதலின் சமூதாய, அரசியல் கருத்துக் களைப் பரப்புவதற்கு முன்னால் நாட்டைப் பார மார்த்திக வெள்ளத்தில் மூழ்குவியுங்கள்.
தர்மபூமியாம் இந்நாட்டில் ஆத்ம வித்யா தானம் என்னும் முதன்மையான அறத்தை நாம் மேற்கொள்வோமாக. ஆனால் அப்பேரறத்தை இந்தி யாவின் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்திவிடல் கூடாது.
சமூகப் புரட்சிக்காரர்கள் எல்லோரும் (அல்லது அவர்களுடைய தலைவர்களேனும்) தங்களுடைய சமதர்மக் கொள்கைகளுக்கெல்லாம் பாரமார்த்திக அடிப்படை ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய அடிப்படை வேதாந்தமேயாகும்,
பலாத்காரமோ, அரசாங்க அதிகாரமோ, கடுமையான சட்டங்களோ சமூக நிலைமையை மாற்ற முடியாது. சமூகத் தீமைகளை நீக்கக் கூடியது பார மார்த்திகப் பயிற்சி ஒன்றே யாகும்.
எனக்கு அரசியலில் நம்பிக்கை கிடையாது. கடவுளும் சத்தியமுமே இவ்வுலகில் உண்மை அரசி யல் ஆகும். மற்றவையெல்லாம் வெறுங்குப்பை.
இந்தியாவில் நாம் எந்த அரசியல் ஏற்பாடுகள் வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறோமோ அவை ஐரோப்பாவில் எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. மேனாட்டார் பல நூற் றாண்டு காலம் சோதனை செய்து அவை பயனற்றவை என்னும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அரசியல் ஆட்சி சம்பந்தமான ஸ்தாபனங்கள், ஏற்பாடுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாய் உபயோகமற்றவை என்று தள்ளப்பட்டிருக்கின்றன. ஐரோப்பா அமைதி இழந்து எப்பக்கம் திரும்புவதென்று தெரியாமல் தவிக்கின்றது…. மனித சமூகத்தை வாள் முனையினால் ஆளுதல் சிறிதும் பயனற்றதாகும். ”பலாத்காரத் தினால் அரசாங்கம்” என்னும் கொள்கை எந்த இடத்திலிருந்து தோன்றிற்றோ அதே இடந்தான் முதலில் இழிவுற்றுத் தாழ்வடைந்து துகள் துக ளாய்ப் போகிறதென்பதை நீங்கள் காணலாம். ஜட சக்திக்குத் தோற்றமளித்த ஐரோப்பாவானது, தனது அடிப்படையை மாற்றிக்கொள்ளாவிடில், தன் வாழ் விற்குப் பாரமார்த்திகத்தை ஆதாரமாகக் கொள் ளாவிடில், ஐம்பது ஆண்டுகளுக்குள் அது மண்ணோடு மண்ணாவது நிச்சயம்.
ஜனங்களால் நடத்தப்படும் புதிய ஆட்சிமுறை ஒன்று தோன்றி வருகிறதென்பதற்கு அறிகுறிகள் ஏராளமாய்க் காணக் கிடக்கின்றன. அவ்வாட்சி முறையைச் சமுதாய ஆட்சி என்றாலும், வேறு எப் பெயரிட்டழைத்தாலும் கவலையில்லை. தங்கள் வாழ்க் கைத் தேவைகள் பூர்த்தி செய்யப் படவேண்டு மென்று ஜனங்கள் கேட்கப்போவது நிச்சயம். வேலை குறைய வேண்டுமென்றும், கொடுமையும் யுத்தமும் ஒழிய வேண்டுமென்றும், வயிறு நிறைய உணவு வேண்டுமென்றும் ஜனங்கள் வலியுறுத்துவார்கள். ஆகவே, தற்கால நாகரிகமோ, வேறெந்த நாகரிக மோ சமயத்தையும் மக்களின் நற்குணத்தையும் அடிப்படையாகக் கொண்டாலன்றி நிலைத்து நிற்குமென்பது என்ன நிச்சயம்? சமயமே வாழ்வின் மூல வேர் என்பதை நம்புங்கள். அது சரியாயிருந் தால் எல்லாம் சரியாயிருக்கும்.
மனிதர்களை சட்ட மன்றத்தின் சட்டத்தினால் தர்மாத்மாக்களாகச் செய்ய முடியாதென்பது உங்களுக்குத் தெரியும்…. ஆகையினால் தான் அரசியலைவிட மதம் முக்கியமானதென்று சொல்லு கிறேன். மதம் வாழ்க்கையின் வேர்; சன்மார்க்கத் தத்துவங்களுடன் அடிப்படையான சம்பந்தமுடையது.
சட்டம், அரசாங்கம், அரசியல் ஆகியவை முடி வான நிலைகளல்ல என்பதை அனை வரும் ஒப்புக் கொண்டே யாக வேண்டும். மக்களின் உண்மை நலம் அவைகளுக்கப்பால் இருக்கிறது. அங்கே சட் டம் தேவையே யில்லை.
வாழ்வின் அடிப்படை, சட்டம் அன்று எனக் கிறிஸ்து நாதர் கண்டிருந்தார். சன்மார்க்கமும் தூய்மையுமே வாழ்விற்குப் பலமளிப்பவையென்று அவர் உணர்ந்திருந்தார்.
இங்கிலாந்து செய்யக் கூடியதெல்லாம் என்ன? இந்தியா தன் கதி மோட்சத்தைத் தானே தேடிக் கொள்வதற்கு உதவி செய்யக்கூடும். அவ்வளவு தான். இந்தியாவின் குரல்வளையில் கைவைத்துக் கொண் டி.ருக்கும் அன்னியர் வார்த்தையைக் கேட்டு நடப் பதனால் ஏற்படும் அபிவிருத்தி எதுவும் பயனளியா தென்பது என் கருத்து மிக உயரிய வேலையாயி னும், அடிமைத் தொழிலாளியினால் செய்யப்படுங் காலத்து அது இழிவுறுகிறது.
தேவைகள் உங்களுக்கா , அல்லது உங்களை ஆள்வோருக்கா என்று சொல்லுங்கள். உங்களுக்கானால், அவைகளை யார் பூர்த்தி செய்ய வேண்டும்? அவர் களா? நீங்களே யா? பிச்சைக்காரனின் தேவைகள் எப்போதும் பூர்த்தி செய்யப்படுவதில்லை. உங் களுக்கு வேண்டுவனவெல்லாம் அரசாங்கம் கொடுத்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அவற்றைவைத்து நிர்வகிக்க மனிதர்கள் எங்கே? எனவே முதலில் மனிதர்களைத் தயார் செய்யுங்கள். மனிதர்கள் நமக்கு வேண்டும். சிரத்தையில்லாவிட்டால் மனிதர்கள் எங்கிருந்து வாருவார்கள்?
முதலில் பாரமார்த்திக அறிவைப் பரப்புங்கள். அதனுடன் லௌகிக அறிவும், மற்ற எல்லா அறிவும் தாமே வரும். ஆனால் சமய சம்பந்தமில்லாத லௌகிக அறிவைப் பெற முயன் றீர்களாயின், இந்தி யாவைப் பொறுத்தவரை, உங்கள் முயற்சி வீணே யாகும். ஜனங்களிடம் அதற்குச் செல்வாக்கு எப் போதும் உண்டாகாது. இதைத் தெளிவாய் உண ருங்கள்.
வருங்கால இந்தியாவை நிர்மாணிப்பதில் முதல் காரியம் சமய ஒற்றுமையேயாகும். யுக யுகாந்தர மாக நின்று நிலவி வரும் பாரத தேசம் என்னும் பாறையில் செதுக்கி அமைக்க வேண்டிய முதற்படி இதுவேயாம். ‘ஹிந்துக்களாகிய நமக்குச் சில பொது இலட்சியங்கள் உண்டு. நமது நன்மையையும் நமது ஜாதியின் நன்மையையும் முன்னிட்டு அற்பச் சண்டைகளையும் சிறு வித்தியாசங்களையும் விட்டு விடவேண்டும்” என்னும் இப்பாடம் நம்மெல்லோ ருக்குமே கற்பிக்கப்படல் அவசியம்.
சிதறிக் கிடக்கும் பாரமார்த்திக சக்திகளை ஒன்று திரட்டுதலே இந்நாட்டில் தேசீய ஒற்றுமை முயற்சியாம். பாரமார்த்திகம் என்னும் கீதத்திற்கு எவரெவருடைய இதயங்கள் ஒத்துத் தாளம் போடு கின்றனவோ அத்தகையவர்கள் சேர்ந்த சமூகமே இந்திய சமூகமாகும்.
உலகமனைத்தும் உண்மையில் ஒன்றே என்னும் உயர் இலட்சியத்தை அனுஷ்டானத்தில் கொண்டு வராமல் இந்தப் பாரத நாட்டை எவரும் புனருத் தாரணம் செய்ய முடியாது.
இரும்பு போன்ற தசை நார்கள், எஃகினை யொத்த நரம்புகள், எதனாலும் தடுக்க முடியாத மனோ வலிமை ஆகிய இவையே நமது தேசத்திற் குத் தற்போது வேண்டியவை. இந்த புவனத்தில் இரகசியங்களை யெல்லாம் ஆழ்ந்து அறியக் கூடிய மனோ வலிமை; ஆழாழியின் அடித்தலத்துக்குப் போக வேண்டியிருந்தாலும், காலனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வந்தாலும் எடுத்த காரியத்தை எவ்வாறேனும் முடிக்கும் அஞ்சா நெஞ்சம்; இவை நமக்கு வேண்டும். எல்லாம் ஒன்றே என்னும் அத் வைத இலட்சியத்தை அறிந்து சாதனத்தில் கொண ரும்போது தான் அத்தகைய மனோவலிமையை நாம் உண்டுபண்ணவும், நிலை பெறச் செய்யவும் இயலும்.
உபநிஷதங்களின் மகத்தான உண்மைகள் உங் கள் முன்னால் இருக்கின்றன. அவற்றை உணருங்கள். அவற்றிற்கிணங்க வாழ்வு நடத்துங்கள். அப்போது இந்தியாவின் கதி மோட்சம் தானே கிட்டுவிடும்.
நமக்கு வேண்டுவது வலிமை, வலிமையே என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வலிமையின் பெருஞ் சுரங்கம் உபநிஷதங்களாகும். உலக முழு வதிற்கும் நவசக்தி ஊட்டுவதற்குப் போதிய வலி மை 2.பநிஷதங்களில் இருக்கிறது. அவற்றின் மூல மாய் உலகத்துக்கே புத்துயுரும், புதிய ஊக்கமும் தரலாம். எல்லாத் தேசங்களையும், சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்களுக்குள்ளே பலவீனர்கள், துன்புற்றவர்கள், கொடுமைக்காளானவர்கள் ஆகிய அனைவரையும் தத்தம் பலங்கொண்டு நின்று விடுதலைபெறும்படி உபநிஷதங்கள் சங்க நாதம் செய்து அழைக்கின்றன. சரீர விடுதலை, மனோ விடுதலை, ஆன்ம விடுதலை எனும் இவையே உபநிஷதங்கள் உ.பதேசிக்கும் மூல மந்திரங்களாகும்.
உபநிஷதங்களிலிருந்து வெடி குண்டைப் போல் கிளம்பி அஞ்ஞான இருட்பாறைகளைத் தகர்க்கும் மந்திரம் ஒன்று உண்டு. அது நிர்ப்பயம். -அஞ்சாமை என்பதே. அஞ்சாமை மதம் ஒன்றே தற்போது கற்பிக்கப் படவேண்டிய மதம்.
எழுங்கள்! கண் விழியுங்கள்; பலவீனம் என்னும் இந்த மாயவசியத்தினின்றும் விடுபடுங்கள். உண் மையில் எவனும் பலவீனனல்லன். ஆன்மா எல்லை யற்றது; சர்வ சக்தி வாய்ந்தது; சர்வமும் அறிந் தது. எழுந்து நில்லுங்கள். ‘ ‘ என்னுளே ஆண்ட வன் உளன்” என்று அறைகூவுங்கள். தமோகுண மும், பலவீனமும், மனோபிரமையும் மிகுந்து நமது ஜாதியை அழுத்தி வருகின்றன. ஓ, ஹிந்துக்களே! அந்த பிரமையினின்று விடுதலை பெறுங்கள் .
உங்களுடைய உண்மை இயற்கையை உணருங்கள். மற்றவர்களுக்கும் அவரவருடைய உண்மை இயற்கையை உணர்த்துங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். ஆன் மா விழித்தெழுந்து வினை செய் யத் தொடங்குங்கால் சக்தி, மகிமை, தூய்மை ஆகிய உயர் நலங்களெல்லாம் தாமே வரும்.
‘அகம் (நான்) பிரம்மம்” என்று ஓயாது சொல்லிக் கொள்ளுங்கள். இந்த மந்திரம், மன தில் படர்ந்திருக்கும் மாசைப் போக்கி, உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் அளவற்ற சக்தியை வெளிக்கொண்டு வரும்.
திரும்பிச் செல்மின், வலிமையும், ஜீவசக்தி யும் நிறைந்திருந்த பண்டைக் காலத்துக்குத் திரும்பிச் செல்மின். பண்டை வாழ்வெனும் அமுத ஊற்றிலிருந்து ஜீவ நீரை நிரம்பப் பருகி முன் போல் மீண்டும் பலசாலிகளாகுமின், இந்தியாவில் வாழ்வுக்கு நிபந்தனை இது ஒன்றேயாம்.
ஹிந்து சமூக முன்னேற்றத்துக்கு மதத்தை அழித்தல் அவசியமில்லையென்று நான் கூறுகிறேன். தற்போது நமது சமூகம் தாழ்ந்த நிலையிலிருப் பதற்கு மதம் காரணமென்றும் மதத்தை முறை படி கைக்கொள்ளாததே காரணமென்றும் சொல் கிறேன். இதில் ஒவ்வொரு வார்த்தையையும் நமது பழைய நூல்களிலிருந்து நிரூபிக்கச் சித்தமா யிருக்கிறேன். என்னுடைய போதனை இதுவேயா கும். இதை நிறைவேற்றி வைப்பதற்கே நமது வாழ் நாள் முழுதும் நாம் போராடவேண்டும்.