7. தாயகத்தில் தொண்டு – உண்மைத் தொண்டர்களின் பயிற்சி
ஆன்மத் தூய்மையினின்றெழும் தீவிர உற்சா கங் கொண்டவர்கள்; இறைவனிடம் அழியா நம் பிக்கையை அரணாகப் பெற்றவர்கள்; ஏழைகளிட மும், தாழ்ந்தவர்களிடமும், ஒடுக்கப்பட்டவர்களிட மும் கொண்ட அநுதாபத்தினால் சிங்கத்தையொத்த தைரிய மடைந்தவர்கள்! இப்படிப் பட்ட ஸ்திரீ புரு ஷர்கள் நூறாயிரம் பேர் வேண்டும். இவர்கள் மோட்சம், பரோபகாரம் தாழ்ந்தோரின் முன்னேற் றம், சமூக சமத்வம் என்னும் கொள்கைகளைப் பிரசாரம் செய்து கொண்டு இந்நாட்டின் ஒரு மூலை யிலிருந்து மற்றொரு மூலைவரை ஆட்சி செலுத்து வார்கள்.
தங்களுடையதெனக் கூடிய எல்லாவற்றையும் தேசத்திற்காகத் தியாகம் செய்யச் சித்தமாயிருப் பவர்கள்; உள்ளும் புறமும் உண்மை வடிவானவர் கள், —இத்தகைய மனிதர்கள் தோன்றும் போது இந்தியா ஒவ்வொரு துறையிலும் பெருமை பெறும்.
சமூக, அரசியல் ஏற்பாடுகள் எல்லாவற்றிற்கும் அடிப்படை மனிதனுடைய குணாதிசயமேயாகும். ஒரு சமுதாயம் குணத்திற் சிறந்து பெருமை பெறு வது அத்தேசத்தின் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களைப் பொறுத்ததன்று; அச்சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நல்லவர்களாய், பெருமை வாய்ந்தவர்களா யிருப்பதையே பொறுத்ததாகும்.
என்னைத் தொடர்ந்து வருவோர் மரணம் நேரி னும் உண்மை பிறழாதவர்களா யிருக்க வேண்டும். அத்தகையவர்களே எனக்குத் தேவை. ஜயாபஜயங் களைப் பற்றி எனக்குக் கவலையில்லை… இயக்கம் தூய் மையா யிருக்க வேண்டும். இன்றேல் இயக்கமே வேண்டாம்.
இவ்வுலகிலுள்ள செல்வ மனைத்தையும்விட மனிதர்களே அரிய செல்வமாவார்கள்.
ஓ பாக்கியசாலியே! இத்தேசத்தின் மக்களை எவனாவது ஒருவன் தன் இதய பூர்வமாக நேசிப் பானாயின் பாரத நாடு மீண்டும் விழித்தெழுமென்று நான் நம்புகிறேன். அம்மக்கள் எத்தகையவர்கள்? லக்ஷ்மி கடாட்சம் அற்றவர்கள்; அதிர்ஷ்டவீனர்கள்; விவேகம் அறவே இழந்தவர்கள்! மிதித்து ஒடுக்கப் பட்டவர்கள்; நித்தியபட்டினிக்காரர்கள்; சண்டை யிடுபவர்கள், அசூயையுடையவர்கள்; வறுமை அறியாமை என்னும் படு சுழலில் அகப்பட்டு நாளுக்கு நாள் அமிழ்ந்து வருபவர்கள்; கோடிக்கணக் கான இத்தகைய தேச மக்களுக்காக, இந்நாட்டிலே பிறந்த விசால இதயம் படைத்த ஸ்திரீ புருஷர்கள் நூற்றுக்கணக்கானவர் தங்கள் சுகபோக ஆசைகளை யெல்லாம் மறந்து பாடுபடுவதற்கு எப்போது முன் வருகிறார்களோ அப்போது தான் பாரதத்தாய் கண் விழிப்பாள்.
இந்தியப் பாமர ஜனங்களைக் கைதூக்கி விடுதல் என்னும் இந்த ஒரே இலட்சியத்திற்காக இதயத்தையும், ஆன்மாவையும் ஈடுபடுத்தி உழைக்கக்கூடிய இளைஞர்களிடையே வேலை செய்யுங்கள். அவர்களைத் தட்டி எழுப்புங்கள். அவர்களுக்குத் துறவு நெறியில் பற்று உண்டாக்குங்கள். அவ்வேலை இந்தியர்களையே முழுதும் பொறுத்திருக்கிறது.
என்னுடைய வேலைத்திட்டம் இதுவாகும். இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஸ்தாபனங்களை இந்தியாவில் ஏற்படுத்தல்; அவர்களைக் கொண்டு உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நமது சமய நூல்களிலுள்ள உண்மைப் பொருள்களை எடுத்துரைக்கச் செய்தல்.
மத்திய கலாசாலையொன்று ஏற்படுத்தி அதில் இளைஞர்களைப் பயில்விக்க வேண்டும். இப்படிப் பயிற்சி பெற்ற பிரசாரகர்களின் மூலமாய் ஏழை களின் வீட்டு வாயிலுக்குக் கல்வியையும், சம யத்தையும் கொண்டு போக வேண்டும். பாமரர் களைக் கைதூக்கி விடுவதற்கான இந்த யோசனையை எங்கும் பரப்புங்கள்.