13. வேதாந்தம் ஜாதி முறையை ஏற்றுக்கொள்கிறதா?
ஜாதிமுறை வேதாந்தத்திற்கு முரணானது. ஜாதி என்பது ஒரு சமுதாயப் பழக்கம். எங்கள் சிறந்த போதகர்கள் அனைவரும் அதை ஒழிக்க எவ்வளவோ முயன்றிருக்கின்றனர். புத்த மதத்திலிருந்து தொடங்கி, அதற்குப் பிறகு தோன்றிய ஒவ்வொரு மதப் பிரிவும் ஜாதியை எதிர்த்துப் போராடியுள்ளன; ஆனால் இந்த முயற்சிகள் ஒவ்வொரு தடவையும் விபரீதமாக அதை உறுதிப்படுத்தவே செய்தன. ஜாதி என்பது இந்திய அரசியல் அமைப்புக்களின் வெறும் பக்க வளர்ச்சி; அது ஒரு பரம்பரைத் தொழிற்சங்கம், அவ்வளவுதான். ஐரோப்பாவுடன் ஏற்பட்ட வியாபாரப் போட்டி, மத போதனைகளைவிட அதிக அளவில் ஜாதி அமைப்பு களைத் தகர்த்து முறித்துவிட்டது.