5. எப்போது மாற்றம் முன்னேற்றமாக முடியும்? முன்னேற்றத்திற்கான மாற்றத்தின் சிறப்புப் பண்புகள் யாவை?
ஆற்றலைச் சேமிப்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அதனைக் கொடுப்பது; சொல்லப் போனால் கொடுப்பது இன்னும் அதிக அவசியம். இதயத்தில் ரத்தம் வந்துசேர்வது இன்றியமையாதது, ஆனால் அது உடல் முழுவதும் பரவாவிட்டால் சாவு நிச்சயம். எல்லா அறிவும் எல்லா கல்வியும் சமுதாயத்தின் நன்மைக்காக ஒரு குறிப்பிட்ட குடும்பத்திலோ ஜாதியிலோ குவிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட காலத் திற்கு மிகவும் அவசியமாகிறது. ஆனால் அது எல்லோ ருக்கும் பகிர்ந்தளிப்பதற்காக மட்டுமே குவித்து வைக்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்படுவது தடைப்படு மானால் அந்தச் சமுதாயம் விரைவில் அழிந்துவிடும்.
உயர்குடியினர் முதல் சாதாரண மக்கள்வரை கல்வியும் பண்பாடும் படிப்படியாக பரவத் தொடங்கிய நாளிலிருந்தே மேலை நாடுகளின் நவீன நாகரீகத் திற்கும், இந்தியா எகிப்து ரோம் நாடுகளின் முற்கால நாகரீகத்திற்கும் இடையே வேற்றுமை வளரத் தொடங் கியது. சாதாரண மக்களிடையே கல்வியும் அறிவும் பரவியதற்கு ஏற்ப நாடும் முன்னேறுவதை நான் கண் முன் காண்கிறேன். ஆணவம் அரச ஆணை இவற்றின் துணையுடன், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் எல்லா கல்வியும், புத்திநுட்பமும் உடைமை யாக்கப் பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.