1. வரலாற்றின் முக்கியத்துவம் என்ன?
ஜடப்பொருளில் உணர்வைப் படிப்படியாக அதிக அளவில் அறிவதுதான் நாகரீகத்தின் வரலாறு.
இயற்கையை எதிர்க்கும் ஒவ்வொன்றும் உணர் வுடன் இருப்பவைதான். அங்கேதான் உணர்வு வெளிப்படுகிறது. ஒரு சிறிய எறும்பைக் கொல்வதற்கு முயன்று பார். அதுகூடத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும். எங்கே போராட்டம் இருக் கிறதோ, எங்கே எதிர்ப்பு இருக்கிறதோ அங்கே உயிரின் அடையாளம் இருக்கிறது. அங்கே உணர்வு வெளிப்படுகிறது.
இயற்கை முழுவதிலும் இரண்டு சக்திகள் செயல் படுவதுபோல் தோன்றுகிறது. இவற்றுள் ஒன்று எப்போதும் பிரித்துக்கொண்டே இருக்கிறது; மற்றது எப்போதும் சேர்த்துக்கொண்டே இருக்கிறது. ஒன்று மனிதர்களைப் பிரிக்க முயல்கிறது, மற்றது மக்களை யெல்லாம் ஒன்றாக்கி வேற்றுமைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்த முயல்கிறது. இந்த இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் இயற்கையின் எல்லா பகுதிகளிலும், மனித வாழ்விலும் இடம் பெறுவதைக் காண்கிறோம்.
உபநிடதங்கள், மற்றும் புத்தர்கள், ஏசுநாதர்கள் போன்ற மதப் பிரச்சாரகர்களின் காலம் முதல் இன்று வரையிலும் நோக்கங்களிலும், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சிக் குரல்களி லும், தங்கள் உரிமைகளை இழந்து வாழ்கின்ற மக்களிலும் ஒருமை, சமத்துவம் என்ற இந்த ஒன்றின் வற்புறுத்தல்தான் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் மனிதத் தன்மை வலுவாக முன் நிற்கிறது. சில வசதிகளைப் பெற்றவர்கள் அவற்றை விட விரும்பு வதில்லை ; அதற்கு அனுகூலமான ஒரு வாதம், அது எவ்வளவு ஒருதலையாக, குறுகிய நோக்கம் உள்ளதாக இருந்தாலும், அந்த வாதத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது இரு சாராருக்கும் பொருந்தும்.