16. அன்பே அளிக்கிறது
அன்பு, நேர்மை, பொறுமை-இவை மூன்றும் இருந்தால் போதும், வேறு எதுவும் தேவையில்லை . வளர்ச்சி, அதாவது விரிந்து பெருகுதல், அதாவது அன்புஇதைத் தவிர வாழ்க்கை என்பது வேறு என்ன? எனவே எல்லா அன்பும் வாழ்வு. அன்பே வாழ்வின் ஒரே நியதி. எல்லா சுயநலமும் மரணமே-இந்த உலகமோ, அல்லது மறு உலகமோ இது உண்மை . நன்மை செய்வது வாழ்வு, பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது சாவு. நமது பார்வைக்குத் தென்படுகின்ற மனித மிருகங்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இறந்தவர்கள், வெறும் பிணங்கள். ஏனெனில் என் இளைஞர்களே, அன்புடை யவனைத் தவிர பிறர் வாழ்பவர்கள் அல்ல. என் குழந்தைகளே, உணர்ச்சி கொள் ளுங்கள், உணர்ச்சி கொள்ளுங்கள். ஏழை களுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப் பட்டவர்களுக்காக உணர்ச்சி , கொள் ளுங்கள். உணர்ச்சியில் ஆழ்ந்து செல்லுங்கள். இதயமே நின்று, மூளை குழம்பி, உங்களுக்குப் பைத்தியமே பிடித்து விடுமெனத் தோன்றும் வரையி லும் உணர்ச்சியில் மூழ்குங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் அந்த ராத்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும். பாடுபடுங்கள், பாடு படுங்கள் – கடந்த பத்து ஆண்டுகளாக இதுவே எனது குறிக்கோளாக இருந்து வந்தது. பாடுபடுங்கள்–இதையே இன் னும் சொல்கிறேன். என்னைச் சுற்றிலும் இருளாக இருந்தபோதும் ‘பாடுபடுங்கள்’ என்றேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும் ‘பாடுபடுங்கள்’ என்று அதையே சொல்கிறேன். என் குழந்தை களே, பயம் வேண்டாம். நட்சத்திரங்கள் மின்னுகின்ற அந்தப் பரந்த வானம் இடிந்து வீழ்ந்து உங்களை நசுக்கிவிடுமோ என்று பயத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்காதீர்கள். கொஞ்சம் பொறுங்கள், இன் னும் சில மணித் துளிகள்தான், அந்த வானம் உங்கள் காலடியில் கிடக்கும். பொறுங்கள்; பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை , புகழால் பயனில்லை, கல்வியால் பயனில்லை, அன்பு ஒன்றே பயன்தருவது; துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து முன்னேறக் கூடியது ஒழுக்கம் ஒன்றுதான்.
மற்ற மனிதர்களுக்காகச் சிறிதும் இரக்கம் காட்டாத இவர்களை மனிதர் என்று நினைக்கலாமா?
கடமை அவ்வளவு இனிமையான ஒன்றல்ல; அன்பு என்னும் எண்ணெய் இடாமல் அதன் சக்கரங்கள் எளிதாகச் சுழலாது; மாறாக, தொடர்ந்து உராய்ந்த வண்ணமே இருக்கும். அன்பு இல்லா விடில் பெற்றோர் குழந்தைகளுக்கும், குழந்தைகள் பெற்றோருக்கும், கணவன் மனைவிக்கும், மனைவி கணவானுக்கும் தங்கள் கடமையை எவ்வாறு செய்ய இயலும்? நமது வாழ்வில் தினமும் சிறு சிறு பூசல்களாகிய உராய்வுகளைச் சந்திக்க வில்லையா? அன்பின் வழியாக மட்டுமே கடமை இனிமையானதாக இருக்க முடி யும். இனி, சுதந்திர நிலையில் மட்டுமே அன்பு பிரகாசிக்க முடியும். புலன்களுக் கும் மனித வாழ்வில் தினமும் சந்தித்தே தீர வேண்டியதான கோபங்களுக்கும் பொறாமைகளுக்கும் இன்னும் எத்தனையோ அற்பத்தனங்களுக்கும் அடிமையாவதுதான் சுதந்திரமா? நாம் வாழ்வில் சந்திக்கின்ற இத்தகைய சிறு நெருடல்களுக்கு நடுவில் பொறுமை யுடன் அவற்றைச் சகித்துக் கொள்வதே சுதந்திரத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடாக இருக்க முடியும். எரிச்சல் மற்றும் பொறாமைக்கு எளிதில் வசப்படுகின்ற இயல்புடையவர் களாகிய பெண்கள் எளிதில் கணவனைக் குறைகூறி விடு கிறார்கள். அதுதான் தங்கள் சுதந்திரம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தாங்கள் அடிமைகளாக இருப்பதையே அதன்மூலம் நிரூபிப்பதை அவர்கள் அறிய வில்லை . மனைவியிடம் குற்றம் காண் கின்ற கணவர்களின் விஷயமும் இதுதான்.
அன்பு பலனளிக்காமல் போவதில்லை. என் மகனே, இன்றோ நாளையோ யுகாந் தரத்திலோ உண்மை வெல்வது நிச்சயம். அன்பு நிச்சயம் வெல்லும். உனது மனித சகோதரர்களை நேசிக்கிறாயா? கடவுளை எங்கேபோய் தேடுகிறாய் நீ? ஏழைகள், துன்புறுபவர்கள், பலவீனர்கள் அனை வரும் தெய்வங்கள் அல்லவா? அவர்களை ஏன் முதலில் வழிபடக் கூடாது? ஏன் கங்கைக் கரையில் கிணறு தோண்டப் போகிறாய்? அன்பின் எல்லாம் வல்ல ஆற்றலில் நம்பிக்கை கொள். மின்னி மறைகின்ற இந்தப் பெயர்புகழை யார் பொருட்படுத்துகின்றனர்! செய்தித்தாள்கள் என்ன கூறுகிறது என்று நான் ஒருபோதும் கவனித்ததில்லை. உன்னிடம் அன்பு இருக் கிறதா? இருந்தால் நீ எல்லாம் வல்லவன். நீ முற்றிலும் சுயநலம் அற்றவனா? அப்படி யானால் உன்னை எதனாலும் தடுக்க முடி யாது. ஒழுக்கத்தின் வலிமையே எங்கும் வெல்லக் கூடியது. கடலின் நடுவிலும் கூட, இறைவனே தன் குழந்தைகளைப் பாதுகாக்கிறார்.
சமுதாயத்தின் வாழ்வில்தான் தனி மனித வாழ்வு அடங்கியுள்ளது. சமுதாயத் தின் இன்பத்தில்தான் தனி மனித இன்பம் அடங்கியுள்ளது. சமுதாயம் இல்லாவிட் டால் தனிமனிதன் இருப்பது முடியாதது; இது அழியாத உண்மை , இந்த அடித் தளத்தில்தான் உலகமே இயங்குகிறது. எல்லை அற்றதான சமுதாயத்துடன் ஒன்றி, அதன் இன்பத்தில் இன்பம் காண்பதும், அதன் துன்பத்தில் துன்புறுவதுமாக மெள்ளமெள்ள முன்னேறுவதுதான் தனி மனிதனின் ஒரே கடமை. கடமை மட்டும்
அல்ல; இந்த நியதியை மீறினால் மரணம், பின்பற்றினால் மரணமிலாப் பெருவாழ்வு உண்டாகிறது.
உலகமாகிய இந்த நரகத்தில், ஒருவன் ஒருநாளாவது மற்றவனது இதயத்திற்குச் சிறிது இன்பமும் அமைதியும் அளிக்க முடியுமானால் அதுவே உண்மை . வாழ் நாள் முழுவதும் கஷ்டப்பட்ட பிறகு நான் இந்த உண்மையை அறிந்தேன்; ஏனைய அனைத்தும் வெறும் மண்ணாங்கட்டி. ….