வெற்றி சுயநலமற்றவனுக்கே
சுயநல நோக்கத்துடன் வெளியே செல்கின்ற ஆற்றல்கள் யாவும் சிதறி வீணாகின்றன. அந்த ஆற்றல் உங்களிடம் திரும்பி வருவதற்கான வழியில்லை . ஆனால் அவற்றின் ஆற்றல் கட்டுப்படுத் தப்படுமானால், அது ஆற்றல் வளர வழிவகுக்கும். இந்தச் சுயக்கட்டுப்பாடு மகத்தான சங்கல்பத்தை உருவாக்குவதற்கு ஏதுவாகும்; ஏசுவையும் புத்தரையும் உருவாக்குகின்ற குணநலனைத் தரும்.
முட்டாள்கள் இந்த ரகசியத்தை அறிவதில்லை , ஆனால் மனிதகுலத்தை ஆள மட்டும் அவர்கள் விரும்புகிறார்கள். வேலைகளைச் செய்து விட்டுக் காத்திருப் பானேயானால் முட்டாள்கூட உலகம் முழுவதையும் ஒருநாள் ஆளலாம். ஆள வேண்டும் என்னும் முட்டாள்தனமான எண்ணத்தை விட்டு விட்டுச் சில ஆண்டு கள் காத்திருக்கட்டும்; அந்த எண்ணம் அவனிடமிருந்து முற்றிலுமாக விலகி விடுமானால், அவன் ஒரு மகத்தான ஆற்ற லாக மாறிவிடுவான். சில மிருகங்களால் சில அடி தூரத்திற்கு அப்பால் எதையும் பார்க்க முடியாது. அதுபோல் நம்மில் பெரும்பாலானோருக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க முடிவதில்லை . ஒரு சிறிய வட்டம், அதுவே நமது உலகம். அதைக் கடந்து பார்க்கின்ற பொறுமை இல்லாமல் ஒழுக்கமற்றவர்களாகவும் தீயவர்களாக வும் மாறிவிடுகிறோம். இதுதான் நமது பலவீனம், வலிமையற்ற நிலை.
நம் நன்மையை மட்டுமே நினைக் கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும். ‘நானே முதலில் உண் பேன். மற்றவர்களைவிட எனக்கு அதிக மான பணம் வேண்டும், எல்லாம் எனக்கே வேண்டும்’, ‘மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும், எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும்’ என்றெல்லாம் நினைப் பவன் சுயநலவாதி. சுயநலமற்றவனோ , ‘நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் அதற்கும் தயாராக இருக் கிறேன்’ என்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மையே மதத்திற்கான உரைகல். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மீக வாதி, அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந் தாலும் படிக்காதவனாக இருந்தாலும், அவன் அறிந்தாலும் அறியவில்லை என் றாலும் அவனே மற்ற அனைவரையும்விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். சுயநலம் கொண்டவன் எல்லா கோயில் களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந் தாலும், சிறுத்தையைப் போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர் கள் ஒவ்வொருவருக்கும் பின்னணியில் எங்கேயோ அளவற்ற ஒருமையுணர்வும் அளவற்ற நேர்மையும் இருந்தே தீரும். ஒருவனது சிறந்த வெற்றிக்கு இவையே காரணம். அவன் ஒருவேளை தன்னலத்தை முற்றிலும் துறந்தவனாக இல்லாமல் போகலாம், ஆனால் அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறான். அவன் முற்றிலும் சுயநலமற்றவனாக இருந்திருந் தால், அவனது வெற்றி புத்தரது வெற்றி யையும் ஏசுநாதரின் வெற்றியையும் போல் மிகச் சிறந்ததாக விளங்கியிருக்கும். எங்கே யும் சுயநலமின்மையின் அளவைப் பொறுத்தே வெற்றியின் அளவும் உள்ளது.
தொடர்ந்து விரிந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை , குறுகுவது சாவு. சொந்தச் சுகங்களையே கவனித்துக்கொண்டு, சோம் பேறியாகக் காலம் கழிக்கின்ற சுய நல மனிதனுக்கு நரகத்தில்கூட இடம் கிடையாது.