1. நமது நோக்கம்
இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம்…. அவன் விசாலமான இதயம், பரந்த மனம், [உயர்ந்த செயல்] இவற்றைப் படைத்திருக்க வேண்டும். … உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை…. உணர்வதோடு நில் லாமல், பொருட்களின் கருத்தை அறிந்து, இயற்கையினுள் ளும் அறிவிலும் ஆழமாக ஊடுருவிக் காண்பவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், [அந்த உணர்ச்சியையும் அறிவையும்] செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படு பவன். மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல் படுவதே தேவை.
மேற்கோள்கள்:- எழுந்திரு! விழித்திரு! பகுதி 1 | VI. பக்தியோகம் | IV. சொற்பொழிவுக் குறிப்புகள் | 4. வழிபடுபவனும் வழிபடுபொருளும்.