விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள்.
கேள்வி:
கே: ‘ஜீவ சேவை மட்டும் முக்தி தருமா?’
சுவாமிஜியின் பதில்:
ப: ‘ஜீவ சேவை நேரடியாக முக்தி தராது; உள்ளத்தைத் தூய்மை செய்வதன்மூலம் மறைமுகமாக முக்தி தரும். ஒரு காரியத்தைச் சரியாகச் செய்ய வேண்டுமானால், அந்த வேளை யில் அந்த வேலையே எல்லாம் என்று கருதி அதில் ஈடுபட வேண்டும். எந்தப் பிரிவைப் பின்பற்றினாலும், ஊக்கம் இல்லை யானால் பயனில்லை. நிஷ்டை வேண்டும், இல்லாவிடில் எந்தப் பயனும் இல்லை. இப்போது கர்மத்தில் கருத்துச் செலுத்துவது அவசியமாக உள்ளது.’
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 6, Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)