விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள்.
கேள்வி:
கே: ‘தியானம் செய்யப் பூஜையறை தேவையில்லை என்று சிலர் சொல்கின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை ?’
சுவாமிஜியின்பதில்:
ப: ‘இறைவனது சான்னித்தியத்தை உணர்ந்தவர்களுக்குத் தேவையில்லை, மற்றவர்களுக்கு வேண்டும். உருவக் கடவுளைக் கடந்து, இறைவனின் அருவ நிலையைத் தியானிக்க வேண்டும். ஏனெனில் உருவக் கடவுள் வழிபாடு முக்தியைத் தர முடியாது. ஆனால் அதன்மூலம் உலகச் செல்வங்களைப் பெறலாம். தாயை வழிபடுபவன் வெற்றி அடைகிறான், தந்தையை வழிபடுபவன் சொர்க்கத்தை அடைவான். சாதுவை வழிபடுபவன் ஞானத்தை யும் பக்தியையும் பெறுவான்.’