விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள்.
கேள்வி:
கே: ‘சிலவேளைகளில் ஜபம் சோர்வைத் தருகிறது. அப்போது ஜபத்தைத் தொடர்வதா, நல்ல நூல்களை வாசிக்கலாமா?’
சுவாமிஜியின்பதில்:
ப: ‘ஜபத்தினால் சோர்வு இரண்டு காரணங்களால் ஏற்பட லாம் ஒன்று, மூளை களைத்துவிடுவதால்; இரண்டு, சோம் பலினால். முதல் காரணமாயிருந்தால் ஜபத்தைச் சற்று நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இந்த நிலையில் ஜபத்தைத் தொடர்ந் தால் போலிக் காட்சிகளில் மயங்க நேரும், சிலவேளைகளில் பைத்தியமும் பிடிக்கலாம். சோம்பலினால் ஏற்பட்ட சோர்வு என்றால், அதற்குப் பரிகாரம் மனத்தைப் பலவந்தப்படுத்தி, ஜபத்தில் தொடர்ந்து ஈடுபடச் செய்வதே.’
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 6, Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)