விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள்.
கேள்வி:
கே: ‘எல்லையற்ற பரம்பொருளான கடவுள் எப்படி எல்லைக்கு உட்பட்ட மனிதனாக அவதரிக்க முடியும்?’
சுவாமிஜியின்பதில்:
ப: ‘கடவுள் எல்லையற்றவர் என்பது உண்மைதான். ஆனால் அவர் எல்லையற்றவர் என்பது நீங்கள் புரிந்துகொண்ட விதத்தில் அல்ல. உலகத்தில் நீங்கள் காண்கின்ற ஏதோ ஒரு பொருளைப்போல் அவரும் பரந்திருப்பதாகக் கொண்டு, எல்லையற்றது என்பதற்குப் பொருளைக் குழப்பிக் கொள் கிறீர்கள். கடவுள் மனித உருவில் அவதரிக்க முடியாது என்று சொல்லும்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பரந்த எல்லை யற்ற தூலப் பொருளாகக் கடவுளை நினைக்கிறீர்கள். அவ்வளவு பெரிய பரந்த ஒன்று இவ்வளவு சிறிய உடலில் எவ்வாறு அடங்கும் என்பதே உங்கள் கேள்வி. ஆனால் எல்லையற்ற பரம்பொருள் என்கிறபோது தனி ஆன்மாவையே குறிப்பிடு கிறோம். அந்த ஆன்மா மனித உருவத்தில் தோன்றுவதா – துளியளவுகூடப் பாதிக்கப்படுவதில்லை .’
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 6, Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)