விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள்.
கேள்வி:
கே: இறைவன் மனிதனாக வரும்போது அவரை எப்படி அறிந்து கொள்வது?’
சுவாமிஜியின் பதில்:
ப: ‘மக்களின் விதியை மாற்றும் வல்லமை பெற்றிருந்தால் அவர் இறைவன். ஒரு சாது எவ்வளவுதான் முன்னேறியவராக இருந்தாலும் இந்த ஈடிணையற்ற நிலையை அடைய முடியாது. ஸ்ரீராமகிருஷ்ணரை இறைவனாக உணர்ந்த யாரையும் நான் காணவில்லை. நாங்கள் ஏதோ சிலவேளைகளில் மங்கலாக உணர்கிறோம், அவ்வளவுதான். அவரை இறைவனாக உணர் வதும், அதேவேளையில் உலக வாழ்க்கையில் பற்றுடன் இருப்பதும் முரணானது.
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 6, Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)