விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள்.
கேள்வி:
‘இந்தியாவில் வேலை செய்வதற்கு எத்தகைய முறையைப் பின்பற்ற வேண்டும்?’
சுவாமிஜியின் பதில்:
‘முதலில் மக்களைச் செயல்முறைக்குப் பயிற்சி அளிக்க வேண்டும், பலசாலிகளாக்க வேண்டும். இத்தகைய சிங்கங்கள் ஒரு டஜன் இருந்தால் போதும், உலகையே வென்றுவிடலாம்; ஆடுகள் பல கோடி இருந்தாலும் பலனில்லை. இரண்டாவதாக, எப்படிப்பட்ட மாமனிதராக இருந்தாலும், அந்தத் தனிமனிதரை லட்சியமாகக் கொள்வதை ஊக்குவிக்கக் கூடாது.’
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 6, Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)