விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள்.
கேள்வி:
‘புதிய பாரதத்தை உருவாக்குவதில் ராமகிருஷ்ண மிஷனின் பங்கு என்ன?’
சுவாமிஜியின் பதில்:
‘இந்த மடத்திலிருந்து நற்பண்புகள் மிக்கோர் பலர் புறப்பட்டு, உலகம் முழுவதையும் ஆன்மீகப் பெருவெள்ளத்தால் நிரப்புவார்கள். இந்த ஆன்மீகப் பேரெழுச்சியைத் தொடர்ந்து பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு பிராமண, க்ஷத்திரிய, வைசியர்கள் உருவாகுவார்கள். சூத்திர ஜாதியே இருக்காது. அவர்களுடைய வேலையை எந்திரங்கள் செய்யும். இந்தியாவின் இன்றைய தேவை க்ஷத்திரிய பலமே.’
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 6, Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)
